1. செய்திகள்

நடப்பாண்டிற்கான மானியம் வழங்கும் திட்டத்தை தொடங்கியது தோட்டக்கலைத் துறை

KJ Staff
KJ Staff
Collection of herbs

இந்தியா மக்களின் ஆரோக்கியத்திற்கு கொடையாக இருப்பது  மூலிகைகள் ஆகும். எனினும் பெரும்பாலான தாவரங்கள் அதிகம் உற்பத்தியாவதில்லை. சில மூலிகைகள் அழியும் தருவாயில் உள்ளன. தற்போது காணக்கிடைக்கும்  மூலிகைகள் நமது தேவையை ஓரளவு நிவர்த்தி செய்து வருகிறது. மூலிகைப் பாதுகாப்பு மற்றும் அதன் தேவைகளைக் கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் மானியம் வழங்கி வருகிறது. நடப்பாண்டில் இதற்காக 3 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, அதை விவசாயிகளுக்கு வழங்கும் பணிகளை தோட்டக் கலைத் துறையினர் துவங்கியுள்ளனர்.

பரிந்துரைக்கப்பட்ட மூலிகைகள்

  • செங்காந்தள்
  • சோற்றுக் கற்றாழை
  • மணத்தக்காளி
  • கூர்க்கன்
  • செம்மரம்
  • நெல்லி
  • வேம்பு
  • துளசி
  • வசம்பு
  • நித்திய கல்யாணி
  • சந்தன

மானிய விவரம்

  • அழிந்து வரும் அரிதான மூலிகைகளை பயிரிடுவதற்கு 75%
  • உற்பத்தி குறைந்து வரும் நீண்ட காலப் பயிர்களுக்கு 50%
  • மற்ற மூலிகைகளுக்கு 20%

என மானியம் நிர்ணயிக்க பட்டுள்ளது. நமது மாநிலத்தின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப நன்கு வளரும் மூலிகைகளை தேர்ந்தெடுத்து வளர்ப்பது நல்லது. தனி விவசாயியாக அல்லாமல் குழுவாக செயல்படுவது சிறந்தது. 1 எக்டேர் நிலப்பரப்பில் சாகுபடி செய்ய மூலிகைப் பயிர்களுக்கு ரூ.30,000 முதல் ரூ.1 லட்சம் வரை மானியம் கிடைக்கும். நீர் பற்றாக்குறை உள்ள விவசாயிகளுக்கு மேலும் சலுகைகளை வழங்கபடும் என  வேளாண் துறை செயலர் ககன்தீப்சிங் பேடி, தோட்டக்கலை இயக்குனர் சுப்பையன் உத்தரவிட்டுள்ளனர்.

Anitha Jegadeesan
Krishi Jagran

English Summary: Horticulture Department has announced Subsidy details of medicinal plants for cultivation Published on: 31 October 2019, 01:18 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.