1. செய்திகள்

ரேஷன் கார்டில் புதிய வசதி: இனி டபுள் ஜாக்பாட் தான்!

R. Balakrishnan
R. Balakrishnan

Ration Card Jackpot

நாடு முழுவதும் இலவச ரேஷன் வழங்கும் வசதியுடன், போர்ட்டபிள் ரேஷன் கார்டு வசதியையும் அரசு தொடங்கியுள்ளது. இந்த வசதி இப்போதுதான் பல மாநிலங்களில் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் நாடு முழுவதும் இத்திட்டத்தைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. கையடக்க ரேஷன் கார்டு வசதி அமலுக்கு வந்த பிறகு, நாட்டின் எந்த மூலையிலும் ரேஷன் வசதியை நீங்கள் எளிதாகப் பெறலாம்ள். இதற்காக நீங்கள் எந்த தனி அட்டையையும் புதிதாக வாங்க வேண்டியதில்லை. உங்கள் பழைய ரேஷன் கார்டிலேயே இந்த வசதியின் பலனைப் பெறுவீர்கள்.

இலவச ரேஷன் (Free Ration)

இலவச ரேஷன் வசதியை டிசம்பர் வரை மத்திய அரசு வழங்குகிறது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், தகுதியான பயனாளிகளுக்கு அரசாங்கம் மாதம் இருமுறை ரேஷன் ஒதுக்கீட்டை வழங்குகிறது. இதனால் நாட்டின் கோடிக்கணக்கான மக்கள் பயனடைகின்றனர். கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ்தான் இலவசமாக உணவு தானியங்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.

பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ், இலவச ரேஷன் வசதி வழங்கப்படுகிறது. இதில், கோதுமை, அரிசி தவிர, பல மாநிலங்களில் எண்ணெய், உப்பு, சர்க்கரையும் வழங்கப்படுகிறது. இதனுடன் 12 கிலோ மாவு மற்றும் 500 கிராம் சர்க்கரையும் வழங்கப்படுகிறது.

இலவச ரேஷன் விநியோகத்தில் ஏதேனும் இடையூறு ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், வீட்டிற்கு எடுத்துச் செல்லும் ரேஷன் முறையை ஆன்லைனில் மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது. இதனால், மத்திய அரசு வழங்கும் ரேஷனில் எவ்வித குளறுபடியும் செய்ய முடியாது. இந்த முறை அமல்படுத்தப்பட்ட பிறகு, ஆலை முதல் ரேஷன் விநியோகம் வரை அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்க முடியும்.

மேலும் படிக்க

பொங்கல் பரிசு: குடும்ப அட்டையுடன் வங்கி கணக்கை எப்படி இணைப்பது?

கோவை இரயில் பயணிகளுக்கு நற்செய்தி: ரயில்வே அமைச்சரின் புதிய அறிவிப்பு!

English Summary: New facility in Ration Card: Double Jackpot now!

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.