1. செய்திகள்

பழைய பென்சன் திட்டம் சாத்தியமே இல்லை: நிதியமைச்சர் எச்சரிக்கை!

R. Balakrishnan
R. Balakrishnan

Old Pension Scheme

பழைய ஓய்வூதிய திட்டம் எப்போது அமல்படுத்தப்படும் என மத்திய, மாநில அரசு ஊழியர்கள் காத்திருக்கின்றனர். சில மாநிலங்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளன. இந்நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமே இல்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பழைய பென்சன் திட்டம்

2003ஆம் ஆண்டு வரை அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் இருந்தது. 2004ஆம் ஆண்டு முதல் தேசிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனால், மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். பஞ்சாப், ஜார்கண்ட், சத்தீஸ்கர், ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.

ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதால் மாநிலங்களுக்கு எதிர்காலத்தில் கடுமையான நிதி சுமை ஏற்படும் என ரிசர்வ் வங்கி அண்மையில் எச்சரித்திருந்தது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ET Awards நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியபோது, அவரிடம் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுமா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமே இல்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதால் மாநிலங்களுக்கு நீண்டகால அடிப்படையில் நிதிச் சுமை ஏற்படும் எனவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

பென்சன் வாங்குவோருக்கு நற்செய்தி: பென்சன் தொகையை உயர்த்திய மாநில அரசு!

அனைத்து விவசாயிகளுக்கும் பிஎம் கிசான் திட்டம்: மத்திய விவசாய அமைச்சர் வேண்டுகோள்!

English Summary: Old Pension scheme is not possible: Finance Minister warning!

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.