1. செய்திகள்

விவசாயிகளுக்காக இரு பெரிய திட்டங்களுக்கு ஒரு லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு!

Daisy Rose Mary
Daisy Rose Mary
PM Modi

One lakh crore fund allocation for two big projects for farmers!

விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கவும், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் அந்த இரு திட்டங்களுக்காக ஒரு லட்சம் கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கீடு செய்துள்ளது.

நிலையான விவசாயத்தை மேம்படுத்துவதற்காக பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய கிருஷி விகாஸ் யோஜனா (PM-RKVY தேசிய விவசாய மேம்பாட்டுத் திட்டம்) மற்றும் உணவுப் பாதுகாப்பு மற்றும் விவசாய தன்னிறைவுக்கான கிரிஷோன்னதி யோஜனா (KY) ஆகியவற்றுக்கு மத்திய அரசு வியாழக்கிழமை (நேற்று) ஒப்புதல் அளித்துள்ளது.

விவசாயிகளின் வருவாய் அதிகரிக்க திட்டம்

இந்த இரு திட்டங்கள் விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பதிலும், நடுத்தர மக்களுக்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் கவனம் செலுத்துகின்றன. இந்த இரு பெரிய திட்டங்கள் மொத்தம் ரூ.1 லட்சத்து ஆயிரத்து 321.61 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அனைத்து மத்திய நிதியுதவி திட்டங்களை (CSS) இரண்டாகப் பகுத்தறிவு செய்வதற்கான வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறையின் (DA&FW) முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

குடை திட்டங்களான, பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய கிருஷி விகாஸ் யோஜனா (PM-RKVY), சிற்றுண்டிச்சாலை திட்டம் மற்றும் கிரிஷோன்னதி யோஜனா (KY)” ஆகியவற்றிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டங்கள் மூலம், மாநிலத்தின் விவசாயத் துறை பற்றிய விரிவான ஆவணத்தை முழுமையான முறையில் தயாரிக்க மாநிலங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கென தயாராகும் முழு ஆவணப் பட்டியல்

இந்த ஆவணம் பயிர்களின் உற்பத்தி மற்றும் செயல் திறனை ஆய்வு செய்ய கவனம் செலுத்துகிறது, ஆனால் பருவநிலையை எதிர்க்கும் விவசாயம் மற்றும் விவசாயப் பொருட்களுக்கான மதிப்புச் சங்கிலி அணுகுமுறையின் மேம்பாடு ஆகியவற்றின் சிக்கல்களையும் சமாளிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டங்கள், மூலோபாய கட்டமைப்பிலிருந்து வரும் முக்கிய நோக்கங்களுடன் இணைக்கப்பட்ட ஒட்டுமொத்த உத்தி மற்றும் திட்டங்களை வெளிப்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

சமையல் எண்ணெய் உற்பத்திக்கு ரூ10,000 கோடி

இது தவிர, சமையல் எண்ணெய் உற்பத்தியை ஊக்குவிக்கவும், தேசிய சமையல் எண்ணெய்கள், எண்ணெய் வித்துக்கள் இயக்கத்திற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2031-ம் நிதியாண்டு வரை நடைபெறும் இந்த பணிக்காக. 6 ஆண்டுகளுக்கு சுமார் 10 ஆயிரத்து 103 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் நோக்கம் நாட்டில் சமையல் எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவு அடைவதே இதன் இலக்கு. இதன் பிறகு எண்ணெய் இறக்குமதியை சார்ந்திருக்க அவசியமில்லை.

Read more:

சமவெளிப்பகுதியில் மிளகுடன் ஜாதிக்காய் சாகுபடி- அசத்திய புதுக்கோட்டை விவசாயி!

மாடித் தோட்டம் அமைக்கப் போறீங்களா? இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க!

English Summary: One lakh crore fund allocation for two big projects for farmers!

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.