1. செய்திகள்

PM Kisan- விவசாயிகளுக்கு நவம்பர் மாதம் இன்ப அதிர்ச்சி காத்திருக்கு!

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
PM Kisan

விவசாயிகள் பெரிதும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும், பிஎம் கிசான் 15-வது விடுவிக்கப்படும் தேதி குறித்த உத்தேச அறிவிப்பு வெளியாகியுள்ளது. 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் நடைப்பெற உள்ள நிலையில், விரைவில் இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு உதவும் வகையில் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி உதவித் திட்டம் (PM kisan சம்மான் நிதி) 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்படி, 4 மாதங்களுக்கு ஒருமுறை தலா 2 ஆயிரம் ரூபாய் என ஆண்டிற்கு 6 ஆயிரம் ரூபாய் விவசாயிகளுக்கு நிதியுதவியாக அளிக்கப்படுகிறது.

இந்த தொகையானது விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்தியா முழுவதும் 8.5 கோடி விவசாயிகள் இந்த திட்டத்தினால் பயன் பெற்று வருகின்றனர். விவசாயிகளுக்கு பிஎம் கிசான் நிதியுதவி திட்டம் ஒரு வரப்பிரசாதமாகவே கருதப்படுகிறது.

இதனிடையே PM கிசானின் 13-வது தவணை பிப்ரவரி 27, 2023 அன்று வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 14-வது தவணையினை ஜூலை 27, 2023 அன்று ராஜஸ்தானின் சிகாரில் நடைப்பெற்ற நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு பணத்தை விடுவித்தார். இதனிடையே 15-வது தவணையினை நவம்பர் மாத கடைசி வாரத்தில் விடுவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. PM kisan தொகையினை உயர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில் அடுத்த தவணையில் ஏதாவது விவசாயிகளுக்கு இன்ப அதிர்ச்சி இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பயனாளியின் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா, இல்லையா என்பதை நீங்களே சரிபார்க்கலாம். விவரம் பின்வருமாறு:

  • PM Kisan Samman Nidhi Yojana திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும் (https://pmkisan.gov.in/ )
  • வலதுபுறத்தில் உள்ள 'பயனாளிகள் பட்டியல்' (Beneficiary List) என்பதைக் கிளிக் செய்யவும்
  • அதன்பின் தோன்றும் பக்கத்தில் மாநிலம், மாவட்டம், துணை மாவட்டம், தொகுதி மற்றும் கிராமம் என்கிற கேள்விகளுக்கு சரியான விவரங்களை தேர்ந்தெடுக்கவும்.
  • இதன்பின் 'Get Report' டேப்பினை கிளிக் செய்யவும்
  • 15-வது தவணை பெறும் பயனாளிகளின் பட்டியல் விவரம் அப்பக்கத்தில் வரும். அவற்றில் உங்களது பெயரை சரிப்பார்த்துக் கொள்ளவும்.

PM kisan-ல் உங்களது தகவல்கள் தொடர்பான ஏதேனும் பிரச்சனைகள் அல்லது கேள்விகள் இருப்பின், விவசாயிகள் இந்த உதவி எண்களை தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்- 155261/011-24300606. நீங்கள் மெயில் மூலமாகவும் சந்தேகங்களுக்கு தீர்வு காணலாம். (pmkisan-ict@gov.in)

PM Kisan Yojana அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 12 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் 13-வது தவணை நிதியுதவினை பெற பதிவு செய்துள்ளனர். ஆனால் 8.69 கோடி விவசாயிகள் மட்டுமே 13-வது தவணையின் கீழ் தலா ரூ.2,000 பெற்றுள்ளனர்.

மீதமுள்ள 3.30 கோடி பதிவு செய்த விவசாயிகள் பல காரணங்களால் நிதியுதவி பெற முடியவில்லை. இவர்களில் சிலர் பயனாளிகள் அல்லாதவர்கள், மற்றவர்கள் சரிபார்ப்பு முடிக்கப்படாததால், புதிய தவணைகளின் பலனைப் பெற இயலவில்லை என கூறப்பட்டது.

PM Kisan Yojana மூலம் பயனடையும் விவசாயிகளை அடையாளம் காண, சரிபார்ப்பு செயல்முறை அல்லது e-KYC அவசியமானது. e-KYC, ஆதார் விவரங்கள், நில விதைப்பு மற்றும் பிற விவரங்களை புதுப்பித்த விவசாயிகள் மட்டுமே அடுத்த தவணைக்கு தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் காண்க:

கரண்ட் கொடுக்குறீயா- முதலையை விடவா? விவசாயிகள் மிரட்டல்

விஜய தசமி முடிந்ததும் வாலை சுருட்டிய தங்கம்- அதிரடி விலை சரிவு

English Summary: PM Kisan A pleasant surprise for farmers in November Published on: 25 October 2023, 11:12 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.