1. செய்திகள்

இன்று கிண்டியில் தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம்

KJ Staff
KJ Staff
Job Fair

சென்னையில் வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை ஆணையர் ஜோதி நிர்மலாசாமி தெரிவித்தார்.

இன்று நடைபெற உள்ள கிண்டி வேலைவாய்ப்பு முகாமினை சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இணைந்து நடத்துகின்றன. கிண்டி தொழிற்பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடை பெறுகிறது.  

8 ஆம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறும்படி கேட்டு கொள்ள படிக்கிறார்கள். அதே போன்று தொழில் நுட்பம் படித்தவர்களும் பங்கு பெறலாம் என அறிவிக்க பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளும் இதில் கலந்து கொண்டு விருப்பமான பணியினை தேர்வு செய்யும்படி கேட்டு கொள்கிறார்கள்.

Recruitment

பல்வேறு தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெற உள்ளது. இதில் தனியார் வங்கி நிறுவனங்களான  ஐ.சி.ஐ.சி.ஐ, சிட்டி பைனான்சியல், ஆம்ரோ வங்கி, ரிலையன்ஸ் மொபைல், ஹச், ஏ.பி.என்,  ஏ.ஐ.ஜி. ஆகிய நிறுவனத்தினர் கலந்துகொண்டு பல்வேறு பணி பிரிவுகளுக்கு தகவல் தொடர்பு மற்றும் வாடிக்கையாளர் சேவை போன்றவற்றிற்கு பணி ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

வேலைவாய்ப்பில் பங்கு பெறும் நிறுவனங்கள் முழுமையான காலி பணியிட விவரம் குறித்து தெரிவிக்க வேண்டும் என கூறியுள்ளது.  இந்த வாய்ப்பினை வேலை தேடுபவர்கள், வேலை மாற்றத்தை நாடுவோர்கள் என அனைத்து தரப்பினரும் பயன் படுத்தும் படி கேட்டுக்கொள்ள படுகிறார்கள்.

Anitha Jegadeesan
Krishi Jagran

English Summary: Private Companies Hiring Employees: Interested Candidates Utilize The Employment Camp Held At Guindy Published on: 26 July 2019, 11:30 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.