1. செய்திகள்

தமிழகத்தில் 20 பாரம்பரிய நெல் ரகங்கள் மீட்பு

T. Vigneshwaran
T. Vigneshwaran
Rice Varieties

தமிழ்நாட்டின் பெரும்பான்மையான சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள், ஒரு காலத்தில் பாரம்பரியமாக விளைத்து வந்த தங்கள் பாரம்பரிய நெல்விதைகளை கலப்பின ஒன்றைப்பயிர் சாகுபடியால் இழந்துள்ளனர். இந்த வகை தனித்துவமான ஊட்டத்து மற்றும் சூழலியல் குணங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் 20 பாரம்பரிய நெல் ரகங்கள் கண்டறியப்பட்டு, மீட்டப்பட்டுள்ளது. இதை சமூதாய விதை வங்கிகள் மூலம் மாநிலத்தில் 500-க்கும் மேற்பட்ட விசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.

அரியலூர், செங்கல்பட்டு, கோயம்புத்தூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கரூர், மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், தூத்துக்குடி, திருவண்ணாமலை, திருவாரூர், திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், விருதுநகர் ஆகிய 24 மாவட்டங்களில் உள்ளூர் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் விருப்பமுள்ள விவசாயிகளைக் கண்டறிந்து இந்த சமூக விதை வங்கிகள் மூலம் ஊக்குவிக்கப் பட்டுள்ளனர்.

பாரம்பரிய நெல் விதை வங்கிகளை வலுப்படுத்த ஒவ்வொரு பயனாளிக்கும் ரூ.2000 வழங்கப்பட்டது. மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் பாரம்பரிய ஆராய்ச்சி மற்றும் முன்முயற்சி திட்டத்தின் ஆதரவுடன் பாரம்பரிய அரிசி வகைகளுக்கு புத்துயிர் அளித்து, பாதுகாத்து, வகைப்படுத்துகிறது.

மேலும் படிக்க:

தேனியில் 30ம் தேதி விவசாயிகள் குறைதீர் முகாம்

தஞ்சாவூர் மூலிகை பண்ணைப் பகுதியில் இருளில் தவிக்கும் மக்கள்

English Summary: Recovery of 20 traditional rice varieties in Tamil Nadu Published on: 27 September 2022, 07:19 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.