1. செய்திகள்

நகைகடன் தள்ளுபடிக்கு ரூ.1,000கோடி ஒதுக்கீடு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Rs 1,000 crore allocation for jewelery loan waiver!

நகைக்கடன் தள்ளுபடிக்காக ரூ.1,000 கோடியும், கால்நடை பராமரிப்புத் துறைக்கு ரூ.1,314 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022-23-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் தாக்கல் செய்தார். அதில் இடம் பிடித்துள்ள முக்கியம்சங்கள்:-

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு பயிர்க்கடன் தள்ளுபடிக்காக 2,531 கோடி ரூபாயும், நகைக்கடன் தள்ளுபடிக்காக 1,000 கோடி ரூபாயும், சுய உதவிக்குழுக்களின் கடன்கள் தள்ளுபடிக்காக 600 கோடி ரூபாயும் என மொத்தம் 4,131 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிதியாண்டில், இதுவரை 14,15,916 விவசாயிகளுக்கு 9,773 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், 10,76,096 குறு, சிறு விவசாயிகளுக்கு 7,428 கோடி ரூபாய் மதிப்பில் வழங்கப்பட்ட பயிர்க்கடன்களும் அடங்கும். நாட்டிலேயே முதல் முறையாக முத்தமிழறிஞர் கலைஞரால் அறிமுகப்படுத்தப்பட்ட வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்திற்கு, இந்த வரவு-செலவுத் திட்டத்தில் 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இம்மதிப்பீடுகளில் கால்நடை பராமரிப்புத்துறைக்கு 1,314.84 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

இரட்டை கரு முட்டைகள் - ஆர்வம் காட்டும் அசைவப் பிரியர்கள்!

கொரோனாவால் அதிகரித்த ஆண்மைக் குறைபாடு பிரச்னை - ஆய்வில் தகவல்!

English Summary: Rs 1,000 crore allocation for jewelery loan waiver! Published on: 18 March 2022, 04:29 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.