1. செய்திகள்

தமிழகத்தை சுட்டெரிக்கும் வெயில், மேலும் 3 நாட்களுக்கு அனல்காற்று வீசும் - வானிலை மையம்!!

Daisy Rose Mary
Daisy Rose Mary

தரைக்காற்று வடமேற்கு திசையிலிருந்து தமிழகப் பகுதி நோக்கி வீசுவதால் இன்று முதல் வரும் 5ம் தேதி வரை தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட 4 முதல் 6 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

3 நாட்களுக்கு அனல்காற்று வீசும் 

இன்று முதல் வரும் 4ம் தேதி வரை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட நான்கிலிருந்து ஆறு டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.

வரும் 5ம் தேதி கரூர், தர்மபுரி, சேலம், நாமக்கல் , கிருஷ்ணகிரி, திண்டுக்கல் , திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட நான்கிலிருந்து ஐந்து டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வானிலை மையம் அறிவுரை 

இதன் காரணமாக ஒரு சில இடங்களில் அனல்காற்று வீசக்கூடும். பொதுமக்கள். விவசாயிகள், தேர்தல் வேட்பாளர்கள், வாக்காளர்கள் மற்றும் போக்குவரத்து காவலர்கள் முற்பகல் 12 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை திறந்தவெளியில் வேலை செய்வது மற்றும் ஊர்வலம் செல்வதைத் தவிர்க்குமாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

English Summary: Tamil Nadu expects Hot wave for Next 3 days, Imd advises people not to Work on open Ground from 12 to 4Pm Published on: 02 April 2021, 03:06 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.