1. செய்திகள்

தமிழகம்: வானிலை அறிக்கை 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Deiva Bindhiya
Deiva Bindhiya
Tamil Nadu: Weather forecast for heavy rain in 7 districts

வங்க கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைத்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கிறது. மேலும் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மார்ச் 3 ஆம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என குறிப்பிட்டுள்ளது. மேலும் வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாக வாய்புள்ளதால், வரும் மார்ச் 2 ஆம் தேதி, தென் தமிழக கடலோர மாவட்டங்கள், தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும்.

அதே போல் மார்ச் 3 ஆம் தேதி, தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடியுடம் கூடிய லேசான மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைகான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

04.03.2022: தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமாக மழை பெய்யக்கூடும். கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் கன மழைக்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர், திருவாருர், நாகை, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் கன மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் வரையும் இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

28.02.2022,: தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இருக்கும் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

01.03.2022: தென் தமிழக வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மீனவர்கள் எச்சரிக்கையுடன் செயலாற்றவும்.

மேலும் படிக்க:

மிளகும், மிளகின் அற்புத குணங்களும்! மிகப் பெரிய வயிற்று வலி நிவாரணி!

EPFO குட் நியூஸ்: இனி இந்த முக்கிய வசதியால், உறுப்பினர்களுக்கு பெரிய நிவாரணம்

English Summary: Tamil Nadu: Weather forecast for heavy rain in 7 districts Published on: 28 February 2022, 05:00 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.