1. செய்திகள்

மாணவர்களின் கல்விக்கட்டணம் - அரசே ஏற்பதாக அறிவிப்பு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
The announcement that the government agrees to the educational fees of the students!

கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் அந்த மாணவ- மாணவிகளின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்பது உறுதியாகியிருக்கிறது.

மாணவர்களின் நலன்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் ஏராளமானோர் இறந்தனர். அந்த வகையில் தங்கள் பெற்றோரை கொரோனா வைரஸ் தொற்றால் இழந்த மாணவ- மாணவிகளின் நலனைக் கருத்தில்கொண்டு அரசு புதிய முடிவை எடுத்துள்ளது.

அரசு அறிவிப்பு

இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளி கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் படிப்புக்கு அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. இதன் ஒருபகுதியாக , கொரோனாத் தொற்றால் பெற்றோரை இழந்த மாணவர்கள் தனியார் பள்ளிகளில் படித்து வந்தாலும் அவர்களும் கல்வி கட்டணத்தை செலுத்துவதில் இருந்து தமிழக அரசு விலக்கு அளித்துள்ளது.

விலக்கு

கொரோனாவால் பெற்றோரை இழந்து பாதிக்கப்பட்ட குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படித்துக் கொண்டிருந்தால் அவர்களுக்கும் கல்வி கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மாணவர்கள் அதே பள்ளியில் கல்வி பயில்வதை பள்ளிகள் உறுதி செய்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

ஒரு சரக்கு வாங்கினால், 2 பாட்டில் இலவசம் - குஷியில் குடிமகன்கள்!

கூழ் காய்ச்சும் போது வலிப்பு -பாத்திரத்தில் விழுந்து இளைஞர் மரணம்!

English Summary: The announcement that the government agrees to the educational fees of the students! Published on: 02 August 2022, 12:11 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.