1. செய்திகள்

TNPSC: சிறை அலுவலர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு

T. Vigneshwaran
T. Vigneshwaran
TNPSC

டிஎன்பிஎஸ்சி தற்போது தமிழக சிறைகள்‌ மற்றும்‌ சீர்திருத்தத்‌ துறையில் காலியாக உள்ள சிறை அலுவலர் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

காலி பணியிடங்கள்: 8
 
பணியின் பெயர் :  சிறை அலுவலர்

பணியின் விவரம்: 

சிறை அலுவலர் (ஆண்கள்) - 6
 
சிறை அலுவலர் (பெண்கள்) - 2
 
விண்ணப்பிக்கும் தேதி: 
 
இப்பணிகளுக்கு விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்கள் வரும் அக்டோபர் 13 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: 
 
www.tnpsc.gov.in,www.tnpscexams.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
 
கல்வித் தகுதி: 
 
விண்ணப்பதாரர்கள் ஏதாவதொரு துறையில்‌ பட்டம்‌ பெற்றிருக்க வேண்டும்‌. குற்றவியல்‌ மற்றும்‌ குற்றவியல்‌ நீதி நிர்வாகம்‌ மற்றும்‌ சமூகப்‌ பணியில்‌ முதுகலைப்‌ பட்டம்‌ பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்‌ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
வயது வரம்பு: 
 
விண்ணப்பதாரர் வயது 32க்குள் இருக்க வேண்டும்.  மேலும் எஸ்சி, எஸ்டி, பிசி, எம்பிசி மற்றும்‌ அனைத்து வகுப்புகளையும்‌ சார்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கு வயவரம்பு இல்லை என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
சம்பள விவரம்: 
 
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம்‌ சம்பளமாக ரூ.38,900 - ரூ.1,35,100 வரை வழங்கப்படும்.
 
தேர்வு செய்யப்படும் முறை: 
 
இப்பணிக்கு எழுத்துத்‌ தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யபடவுள்ளனர். டிசம்பர் 22 ஆம் தேதி முற்பகல்‌ 9.30 முதல்‌ பிற்பகல்‌ 12.30 வரை தாள்‌-1க்கான தேர்வும்‌, பிற்பகல்‌ 2.30 முதல்‌ 5.30 வரை தாள்‌-2க்கான தேர்வும்‌ நடைபெறுகிறது.
மேலும் படிக்க:

 

English Summary: TNPSC: Written Test for Jail Officer Posts Published on: 14 September 2022, 07:05 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.