1. செய்திகள்

மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பா? முதலமைச்சர் இன்று ஆலோசனை!!

Daisy Rose Mary
Daisy Rose Mary

தமிழகத்தில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை அமல்படுத்துவதா அல்லது தளர்வுகளுடன் நீட்டிப்பதா என்பது குறித்து உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மே 10-ந் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வராததையடுத்து கடந்த மே 24-ந் தேதி முதல் 31-ந் தேதி வரையில் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதைதொடர்ந்து மேலும் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கை வரும் 7-ம் தேதி வரை நீட்டித்து அவர் உத்தரவிட்டார். இந்நிலையில், ஊரடங்கு முடிய இன்னும் சில நாட்களை உள்ள நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இன்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.

தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு மற்றும் அரசு மேற்கொண்ட நோய்த் தடுப்பு நடவடிக்கைகளால் தமிழகத்தில் தற்போது கொரோனா பரவலின் வேகம் படிப்படியாக குறையத்தொடங்கியுள்ளது. இதனால், ஊரடங்கு தளர்வுகள் இன்றி நீட்டிக்கப்படுமா? அல்லது சில தளர்வுகள் அளிக்கப்படுமா? என்பது குறித்து இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க.... 

கொரோனா 3-ஆம் அலையை தடுக்க நாம் இப்போதே தயாராக வேண்டும்! இந்திய மருத்துவ சங்கம் வேண்டுகோள்!

கரும்பூஞ்சை நோய்க்கு தமிழகத்தில் முதல் உயிரிழப்பு!

English Summary: Will the curfew be extended again, Chief minister of Tamilnadu to discuss by today Published on: 04 June 2021, 01:33 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.