1. மற்றவை

7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
7th Pay Commission: The next jackpot for central government employees!

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 அலவன்சுகளை அதிகரிப்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. அரசு இறுதி முடிவு எடுக்கும் பட்சத்தில், ஊழியர்களுக்கு சம்பளம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம்,  மத்திய அரசு ஊழியர்கள் பல நாட்களாகக் காத்திருந்த பல விஷயங்கள் தொடர்பான தீர்வுகளை அவர்கள் விரைவில் பெறக்கூடும்.

பொதுவாக மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் ஃபிட்மென்ட் ஃபேக்டரால் தீர்மானிக்கப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசு சமீபத்தில் 3% அகவிலைப்படி உயர்த்தியது. இதற்குப் பிறகு, மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி 34% ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து, தற்போது ஊழியர்களின் சம்பளம் மீண்டும் உயரப் போகிறது. மேலும் ஊழியர்களின் 4 கொடுப்பனவுகளை அதிகரிக்க அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. இந்த கொடுப்பனவுகள் தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டால், ஊழியர்களின் சம்பளத்தில் பம்பர் உயர்வு இருக்கும்.

அகவிலைப்படி

மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்ட பிறகு, தற்போது மற்ற அலவன்ஸ்களும் அதிகரிக்கப்பட உள்ளன. ஊழியர்களின் சம்பளம் அடுத்த மாதம் மீண்டும் உயரும். அகவிலைப்படியை உயர்த்திய பிறகு, ஊழியர்களின் பயணப்படி மற்றும் நகரப் படியும் அதிகரிக்கப்படும். டிஏ உயர்வுக்குப் பிறகு, டிஏ மற்றும் சிஏ அதிகரிப்புக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதிகரிக்கும்

இது தவிர, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி மற்றும் பணிக்கொடையும் அதிகரிக்கும். மத்திய ஊழியர்களின் மாதாந்திர பிஎஃப் மற்றும் பணிக்கொடை அடிப்படை ஊதியம் மற்றும் டிஏவில் இருந்து கணக்கிடப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், அகவிலைப்படி அதிகரிப்பால், பிஎஃப் மற்றும் கிராஜுவிட்டி ஆகியவையும் அதிகரிப்பது உறுதி.

நான்கு அலவன்ஸ்கள்

அகவிலைப்படி உயர்வு காரணமாக, மத்திய ஊழியர்களின் வீட்டு வாடகைப் படி, அதாவது ஹவுஸ் ரெண்ட் அலவன்ஸ், பயணப் படி ஆகியவற்றில் உறுதியான உயர்வு உள்ளது. ஊழியர்கள் ஒரே நேரத்தில் நான்கு கொடுப்பனவுகளின் அதிகரிப்பின் பலனைப் பெறலாம். கடந்த 9 மாதங்களில் அரசு ஊழியர்களின் அகவிலைப்படி இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. இப்போது பணியாளர்களும் ஓய்வூதியம் பெறுவோரும் 34% விகிதத்தில் டிஏ மற்றும் டிஆர் பெறுகிறார்கள். இதுதவிர மத்திய ஊழியர் அமைப்பும் 18 மாத நிலுவைத் தொகைக்காக அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.

அரசுக்கு நிதிச்சுமை

அரசின் இந்த அறிவிப்புக்குப் பிறகு, 50 லட்சம் ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலன் பெறுவார்கள். மறுபுறம், இது அரசுக்கு ஆண்டுக்கு 9455.50 கோடி சுமையை அதிகரிக்கும்.

மேலும் படிக்க...

ரூ.2 லட்சம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை- TNPSC அறிவிப்பு!

இதய ஆரோக்கியத்திற்கு தினமும் 3 அல்லது 4 முந்திரி!

English Summary: 7th Pay Commission: The next jackpot for central government employees! Published on: 28 July 2022, 10:09 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.