1. மற்றவை

மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.20,000க்கு மேல் சம்பள உயர்வு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 38 சதவீதமாக உயர்த்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி 20,000 ரூபாய்க்கு மேல் சம்பள உயர்வு இருக்கும்.

அகவிலைப்படி

மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அவர்களின் குடும்பச் செலவுகளைக் கையாள பணவீக்கத்தின் அடிப்படியில்தான் இந்த அகவிலைப்படி வழங்கப்படுகிறது. பணவீக்கம் அதிகரித்தாலும் ஊழியர்களின் வாழ்க்கை நிலையில் எந்த வித்தியாசமும் இருக்கக்கூடாது என்பதே அரசின் நோக்கமாகும்.

எனவே பணவீக்கம் உயரும்போது அகவிலைப்படியும் உயர்த்தப்படுவது வழக்கம். குறிப்பாக ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வை எதிர்பார்க்கலாம்.

அந்த வகையில், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு வெளியிட்டது. அதன்படி, ஜனவரி 1ஆம் தேதி முதல் இந்த அகவிலைப்படி உயர்வு அமலாகிறது. ஏப்ரல் மாத சம்பளத்துடன் மூன்று மாத நிலுவைத் தொகையையும் வழங்குவது குறித்து நிதி அமைச்சகம் ஆலோசணை மேற்கொண்டது. .

4 சதவீதம் 

இந்நிலையில் தற்போது ஜூலை மாதத்தில், மீண்டும் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் அகவிலைப்படி 4 சதவீதம் வரை அதிகரிக்கலாம் என்பது மார்ச் மாதத்தில் வந்த அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு (AICPI) மூலமாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நுகர்வோர் விலைக் குறியீடு புள்ளிவிவரங்களில் சரிவு ஏற்பட்டது. இந்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில், ஜூலை - ஆகஸ்ட் மாதங்களுக்கான அகவிலைப்படி அதிகரிப்பதற்கான வாய்ப்பு குறைவாக இருந்தது. ஆனால் மார்ச் மாத புள்ளி விவரங்கள் வெளியான பிறகு அகவிலைப்படி உயர்வு இருக்கும் என்று நம்பப்படுகிறது.

காத்திருப்பு

அடுத்து வரும் ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் அகவிலைப்படி உயர்வு 4 சதவீதமாக இருந்தால், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயரும். ஏப்ரல், மே மாதங்களுக்கான புள்ளிவிவரங்கள் இன்னும் வரவில்லை என்றாலும், அதிகரித்து வரும் பணவீக்கத்தைப் பார்க்கும்போது, நுகர்வோர் விலைக் குறியீடு அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே அகவிலைப்படி உயர்வை ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

எவ்வளவு சம்பளம்?

மத்திய அரசு ஊழியர்களில் ரூ.56,900 அடிப்படைச் சம்பளம் உள்ள ஊழியர்களுக்கு அகவிலைப்படி 38 சதவீதம் என்ற கணக்கில் அவர்களின் அகவிலைப்படி ரூ.21,622 ஆக இருக்கும். தற்போதைய நிலையில் 34 சதவீத அகவிலைப்படி கணக்கீட்டில் இந்த ஊழியர்களுக்கு ரூ.19,346 அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இதன்படி அவர்களது சம்பளம் ஒவ்வொரு மாதமும் ரூ.2,276 (ஆண்டுக்கு ரூ.27,312) அதிகரிக்கும்.

குறைந்தபட்சம்

18,000 ரூபாய் அடிப்படை சம்பளம் உள்ளவர்கள் தற்போது ரூ.6,120 அகவிலைப்படி பெறுகின்றனர். அவர்களின் அகவிலைப்படி 38 சதவீதமாக உயர்ந்தால், மொத்த உயர்வு ரூ.6,840 ஆக இருக்கும். அதாவது ஒவ்வொரு மாதமும் சம்பளத்தில் 720 ரூபாய் அதிகமாகக் கிடைக்கும். இதன்படி ஆண்டுக்கு ரூ.8,640 உயர்வு இருக்கும். இதனால் சம்பளமும் உயரும்.

மேலும் படிக்க...

பணிநேரத்தில் ஊழியர்கள் தூங்கலாம்- அனுமதி அளித்த நிறுவனம்!

சாப்பாட்டுக்குப் பிறகு இனிப்பு- இந்தத் தப்பு இனி வேண்டாம்!

English Summary: Central government employees' salary increase of more than Rs 20,000! Published on: 10 May 2022, 07:35 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.