1. மற்றவை

"கிளைமேட் ஸ்மார்ட் அக்ரிகல்ச்சர் இனி நமக்கு அவசியமே"

KJ Staff
KJ Staff
climate smart agriculture

Technology Help Reduce Food Insecurity

உணவு பற்றாக்குறையை போக்குவதற்கு கிளைமேட் ஸ்மார்ட் அக்ரிகல்ச்சர் தொழில்நுட்பம் நிச்சியம் உதவும் என்று டாபோலி கொங்கன் கிரிஷி வித்யாபீத் துணைவேந்தர் பாலாசாஹேப் சாவந்த் கூறினார்.

அன்றாட வாழ்வில் மக்களின் உணவு பற்றாக்குறையை போக்குவதற்காக வேளாண் தொழில்நுட்பங்கள் உருவெடுத்து கொண்டுதான் உள்ளன இருப்பினும் அனைத்தும் வெற்றிபெறுவதில்லை ஏதோ ஒரு தடை வந்து கொண்டு தான் இருக்கிறது, பல வேளாண் தொழில்நுட்ப கலைஞர்கள் பல்வேறு விதமான அறிவியல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட தொழில்நுட்பம் தான் " கிளைமேட் ஸ்மார்ட் அக்ரிகல்ச்சர் " தொழில்நுட்பம்.

புவி வெப்பமடைதல் மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவை பயிர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளன, மேலும் அதிகரித்து வரும் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய நாம் 'கிளைமேட்-ஸ்மார்ட் அக்ரிகல்ச்சர் ' அவசரமாக மாற வேண்டிய அவசியம் உள்ளது என்று டாபோலி கொங்கன் கிரிஷி வித்யாபீத் துணைவேந்தர் பாலாசாஹேப் சாவந்த் கூறினார்.

நஷ்டத்தைத் தவிர்க்க, மாறிவரும் தட்பவெப்ப நிலைக்குத் தகுந்தது போல மா, நெல் மற்றும் இதர பயிர் வகைகளைப் பயிரிட வேண்டும் என்றார். இந்திய விவசாயிகள் தங்களின் கடின உழைப்பால், வெப்ப மண்டல பகுதிகளில் உள்ள திராட்சை மற்றும் ஆப்பிள் பயிர்களில் நல்ல விளைச்சலைப் பெற முடிந்தது என்று டோடமார்க் லக்ஷ்மிபாய் ஹல்பே கல்லூரியில் பொருளாதாரத் துறை மற்றும் இந்திய சமூக அறிவியல் மற்றும் ஆராய்ச்சி அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் சாவந்த் கூறினார்.

“கொங்கனில் உள்ள தோட்டக்கலை வல்லுநர்கள் மாறிவரும் வானிலை காரணமாக அல்போன்சா மா மற்றும் பிற பயிர்களின் விளைச்சலுக்கு இழப்பை எதிர்கொள்கின்றனர். காலநிலை விழிப்புணர்வு கொண்ட மாம்பழ வகைகளை நாம் உருவாக்க வேண்டும். காலநிலை மற்றும் புவி வெப்பமடைதலின் திட்டமிடப்பட்ட மாற்றங்கள் காரணமாக விளைச்சல் மட்டுமல்ல, பயிர்களின் ஊட்டச்சத்து மதிப்பும் மோசமாகப் பாதிக்கப்படும். முடிந்தவரை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை நியாயமான முறையில் பயன்படுத்துவதன் மூலம், தேவை மற்றும் விநியோகத்தின் சமநிலையை நாம் பராமரிக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.    

கொங்கன் கிருஷி வித்யாபீடத்தின் ஆராய்ச்சி இயக்குனர் சஞ்சய் பாவே, பருவநிலை மாற்றம் மற்றும் விவசாயிகளால் எதிர்பார்க்கப்படும் அச்சுறுத்தல்களை எவ்வாறு சமாளிக்க முடியும் என்பது பற்றிய பல்வேறு உண்மைகளை எடுத்துரைத்தார்.

லக்ஷ்மிபாய் ஹல்பே கல்லூரியின் முதல்வர் சுபாஷ் சாவந்த் இந்நிகழ்ச்சியில் தலைமை வகித்தார். தொடக்க அமர்வுக்குப் பிறகு மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். கோவா மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள், அறிஞர்கள் மற்றும் விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்றனர்.

மேலும் படிக்க:

காலநிலை மாற்றம் உணவு விநியோகத்தை குறைப்பதால் உலகளாவிய வறுமை அதிகரிக்கும்: ஐ.நா சபை

விவசாயிகளுக்கு பயனளிக்கும் 'உழவன் செயலி' குறித்து அறிவோமா!!!

English Summary: "Climate Smart Agriculture Is What We Need Now" - Can This Technology Help Reduce Food Insecurity

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.