1. மற்றவை

அகவிலைப்படி நிலுவைத்தொகை இப்போதைக்கு கிடையாது - கைவிரித்த அரசு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
There is currently no balance on the price - the government has handed over!

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி அரியர் தொகை இப்போதைக்கு வழங்கப்பட மாட்டாது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி நிலுவைத் தொகைக்காக காத்திருக்கும் நிலையில், அரசின் இந்த அறிவிப்பு அவர்களுக்கு ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

​அகவிலைப்படி நிறுத்தம்

2020ஆம் ஆண்டில் கொரோனா நெருக்கடி தொடங்கியபோது செலவுகளை சமாளிப்பதற்காக அகவிலைப்படி உயர்வு வழங்குவதை மத்திய அரசு நிறுத்திவைத்தது. பின்னர் 2021ஆம் ஆண்டு ஜூலை முதல் மீண்டும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது.

அகவிலைப்படி (According to DA)

ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கத்தை சமாளிப்பதற்காக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. இதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஜனவரி, ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது.

​18 மாத நிலுவைத் தொகை (18 months outstanding)

2020 ஜனவரி முதல் 2021 ஜூன் வரை 18 மாதங்களுக்கான அகவிலைப்படி நிலுவைத் தொகையை அரசு எப்போது வழங்கும் என மத்திய அரசு ஊழியர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இதனால் அரசு ஊழியர்களுக்கு பெருந்தொகை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

ஏமாற்றம் (Disappointment)

இந்நிலையில், ஓய்வூதிய விதிமுறைகள் திருத்தத்திற்கான நிலைக் குழுவின் 32ஆவது கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் மத்திய பென்சனர் நலத்துறை இணையமைச்சர் ஜித்தேந்திர சிங் பங்கேற்று பேசினார். அப்போது அவர், 18 மாதங்களுக்கான அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்கப்படாது என தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

​எவ்வளவு சேமிப்பு?

18 மாதங்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் வழங்காததால் மத்திய அரசு தோராயமாக 34,402 கோடி ரூபாயை சேமித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அகவிலைப்படி

முன்னதாக மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 34% ஆக உயர்த்துவதற்கு கடந்த மார்ச் மாதம் மத்திய கேபினட் ஒப்புதல் அளித்தது. இதற்கு முன் அகவிலைப்படி 31% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

கட்டிப்பிடி வைத்தியம்- உடல் ஆரோக்கியத்திற்கு அதிகப்பலன் தரும்!

வாட்டும் வெயிலிலும் உடலைக் குளுகுளுவென வைத்துக்கொள்ள வேண்டுமா?

English Summary: There is currently no balance on the price - the government has handed over! Published on: 26 April 2022, 06:55 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.