1. கால்நடை

மரபு மருத்துவமான நாட்டு கோழி மற்றும் ஸ்லொவ் பாயிஸனான ப்ராயிலர் கோழி

KJ Staff
KJ Staff

வீட்டு விசேஷங்களில் விருந்துக்கு வந்தவர்களை மன நிறைவான உபசரிப்போடு சிறந்த விருந்தோம்பல் அழிப்பது நம் தமிழ் பண்பாடு. வீட்டிற்கு முன்  அலைந்து கொண்டிருக்கும் நாட்டுக்கோழியை பிடித்து கமகமக்கும் சுவையான உணவோடு  மக்கள்  அன்பையும், ஆரோக்கியதையும் கொடுக்கும் நம் பண்பாடும், மரபும் இன்றைக்கு பெரும் அளவில் குறைந்து விட்டது என்றே கூறலாம்

நாட்டுக்கோழியில் உள்ள சிறந்த நன்மைகளும், மருத்துவ குணங்களும்

தசைகளுக்கும், நரம்புகளுக்கும், பலத்தை கொடுக்கும் வகையில் நாட்டுக்கோழி சிறந்த மருந்து. சளி, இரும்பல் என்றாலே  சற்று மிளகு சேர்த்து நாட்டுக்கோழி ரசம் வைத்து கொடுத்தால் அனைத்தும் பறந்து போய் விடும் என்று பாட்டி கூறுவார். சுவாச பிரச்சனைக்கு நாட்டுக்கோழி உணவு நல்ல மருந்தாகும். உடம்பு நல்ல வலுவாக இருப்பதற்கு  நாட்டுக்கோழி சாப்பிடுவது நல்லது. எந்த வித ரசாயனம் சேர்க்காத சுத்தமான ஆரோக்கியமானது நாட்டுக்கோழி.  

நாட்டுக்கோழி முட்டை

நாட்டு கோழி முட்டை சாப்பிட்டு வந்தால், அடிக்கடி ஏற்படும் பசி உணர்வை குறைத்து, அளவுக்கதிகமாக சாப்பிட தூண்டும் உடல் வேட்கையை கட்டுப்படுத்தும். நாடு முட்டை  சாப்பிடுவதால் உடலுக்கு அத்தியாவசிய சத்துக்கள் கிடைக்கும் அதே நேரத்தில் உடலின் எடையும் சீக்கிரமாக குறையும்.  கர்பிணி பெண்களுக்கு  அணைத்து சத்துக்களும் கொடுக்கும் வகையில் இந்த நாட்டுக்கோழி முட்டை அமைகிறது. இம்முட்டையில் இருக்கும் புரதம், கால்சியம் போன்ற சத்துகள் கர்ப்பிணி பெண்களுக்கும், அவர்கள் கருவில் வளரும் குழந்தைகளுக்கும் தேவையான ஊட்டச்சத்து அளிக்கிறது.நாட்டு கோழி முட்டையில் எலும்புகளை வலிமையாக்கும் கால்சியச்சத்து  அதிகமுள்ளது. இந்த முட்டையை சாப்பிட்டு வருபவர்களுக்கு எலும்புகள் உறுதியாகும். நாட்டுக்கோழி முட்டையில் புரதச்சத்து அதிகம் உள்ளது. எனவே கண் பார்வை குறைபாடு, கண்ணில் புரை போன்ற பிரச்சனைகளுக்கு இது மிக சிறந்தது. தலை முடி உதிர்வதை குறைத்து நீளமான முடி வளர்வதற்கு நாட்டு  முட்டை சாப்பிடுவது நல்லது.மேலும் அடிக்கடி நகம் உடைவது குறையும். நாட்டு கோழி முட்டை  சாப்பிட்டு வந்தால் எந்த வித புற்றுநோய்களும்  ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக குறைவு என்று மருத்துவர்கேள கூறியிருக்கிறாரகள்.

ஸ்லொவ்  பாயிசன் போன்றது ப்ராயிலர் கோழி

ஆறு மாதத்தில் வளர வேண்டிய கோழி நாட்பது நாளில் வளர்ச்சி அடைகிறது. இந்த வளர்ச்சிக்கு பன்னிரண்டு விதமான ரசாயன ஊசிகளும், நோய் தொற்று வராமல் இருப்பதற்காக அதிகமான ஆன்டி பயாடிக் செலுத்தப்படுகிறது. இதனால் கோழியின் உடலில் இயற்கையான செயல்கள்  மாறி சத்துக்கேட்டதாக வளர்கிறது. மேலும் இதன் சதைகள் பெரிதாக வளர்வதற்கு போடும் ஊசிகலால் ஆண்மை குறைபாடு ஏற்படுவதோடு  குழந்தை பருவத்திலேயே பெண் பிள்ளைகள் பருவமடைந்து விடுகிறார்கள். இந்த கோழிகளின் வளர்ச்சிக்காக போடப்படும் ஹோர்மோன் ஊசிகளால் மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள்  அதிகம் உண்டு என ஆராச்சியில் கூறப்பட்டுள்ளது. இது நம் கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தி  ஈரல் நோயையை உண்டாக்குகிறது.இதில் உள்ள கேட்ட கொழுப்புகள் இரத்தத்தில்  கலந்து இரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இப்படி  நாட்டு கோழிகளை மறந்து ப்ராயிலர் கோழிகளை சாப்பிட்டு நமக்கு நாமே நோயை தேடிக்கொண்டிருக்கிறோம்.

நாட்டு கோழி மற்றும் அதன் முட்டையை சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்தி  உணவை மருந்தாக மாற்றிக்கொள்வோம்.

English Summary: Chrysler chicken with traditional chicken and slave pyase Published on: 16 April 2019, 02:22 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.