1. Blogs

நீடித்த வேளாண்மைக்கு ஏற்ற ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம்

KJ Staff
KJ Staff
Integrated Farming

ஒருங்கிணைந்த பண்ணைய திட்டதின் கீழ் உப தொழில் செய்ய  விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும் என மயிலம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்.துள்ளார். விழுப்புரம் மாவட்டம், மயிலம் வட்டாரத்தில் உளுந்து சாகுபடி செய்யும் 100 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மானியம் வழங்கப்பட உள்ளது.

நீடித்த வேளாண்மைக்கான தேசிய இயக்கத்தின் சார்பாக  மானாவாரி மேம்பாடு திட்டம் மூலம் அப்பகுதிகளில் ஒரு ஹெக்டேர் மற்றும் அதற்கு மேல் மானாவாரியாக உளுந்து சாகுபடி செய்யும் 100 விவசாயிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவர்கள் செய்யும் உபதொழிலுக்கு மானியம் வழங்கப்பட உள்ளது. மானிய விவரம் பின்வருமாறு

  • பயிர் சாகுபடிக்கு - ரூ 10,000/-
  • 2 கறவை மாடுகள் - ரூ 30,000/-
  • 10 ஆடுகள் வளர்க்க - ரூ 15,000/-
  • 20 நாட்டுக் கோழிகள் - ரூ 6,000/-
  • தேனீ வளர்க்க -  ரூ 4,800/-
  • மண் புழு உரம் தயாரிக்க - ரூ 25,000/-
  • பழ மரங்கள் வளர்க்க - ரூ 5,000/-
  • கால்நடைகளுக்கான தீவன மரம் வளர்க்க - ரூ 4,200/-

என மானியம் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டம் குறித்த மேலும் விபரங்களுக்கு மயிலம் உதவி வேளாண்மை அலுவலகத்தை அணுகாலம் என தெரிவித்தார்.

Anitha Jegadeesan
Krishi Jagran

English Summary: Good News For Mailam Farmers: Agriculture Department Announced Subsidy for Integrated Farming Published on: 07 November 2019, 04:40 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.