1. Blogs

விவசாயிகளை ஊக்குவிக்கவும், மகசூலை அதிகரிக்கவும் வேளாண்துறை நடவடிக்கை

KJ Staff
KJ Staff
Foxtail Field

தமிழகத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட 12 கடலோர மாவட்டங்களில் இராமநாதபுரம் மாவட்டமும் ஒன்று.  சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த பல்வேறு  நலத்திட்டங்கள் பன்னாட்டு வங்கி நிதியம் மூலம் இம்மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2017ம் ஆண்டு முதல் இத்திட்டத்தின் மூலம் எல்லா தரப்பு மக்களும் குறிப்பாக விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், மீனவர்கள் போன்றோருக்கு இதுவரை ரூ.14.65 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.

நடப்பு ஆண்டில் (2019-20) சுமார் 350 ஏக்கரில் சிறுதானிய விதைகளை பயிரிட திட்டமிட்டிருப்பதாக வேளாண்துறை தெரிவித்துள்ளது.  இதற்காக 12 ஊராட்சிகளுக்கு உள்பட்ட கிராமங்களில் இருந்து 1200 விவசாயிகளை தேர்வு செய்து, அவர்களுக்கு தலா இரண்டரை கிலோ குதிரைவாலி விதைகளை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

Foxtail Millet

கூடுதலாக 43 ஏக்கரில் குதிரைவாலி பயிரிட திட்டமிட்டுள்ளதால், சிறுதானிய விவசாயம் மேற்கொள்ள இருக்கும் 17 பேருக்கு மானிய விலையில் விதைகள் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். புதுதில்லியிலிருந்து வரும் சிறப்புக்குழுவினா் மேற்கொள்ளப்பட்டு வரும் நலத்திட்ட பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்யவுள்ளனா்.  நவம்பா் 1, 2 ஆகிய தேதிகளில் 12 ஊராட்சிகளில் ஆய்வை மேற்கொள்ளவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Anitha Jegadeesan
Krishi Jagran

English Summary: UNSER Tsunami Reconstruction Project, Agriculture Department Supply Free Samples Of Foxtail Seeds To Farmers Published on: 02 November 2019, 11:14 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.