1. Blogs

200 ரூபாய் முதலீட்டில் கணவன் மனைவி இருவருக்கும் பென்சன் திட்டம்!

R. Balakrishnan
R. Balakrishnan
Pension scheme

ஒவ்வொரு நபரும் பணிக்காலத்தின் போது சம்பளம் மற்றும் இதர சலுகைகளை பெற முடியும். ஆனால், பணி ஓய்வுபெற்ற பின் அவர்களுக்கான வருமானமும், சலுகைகளும் குறைந்துவிடும். எனவே, பென்சன் உள்ளிட்ட ஓய்வுக்கால வருமானத்துக்கு இப்போதில் இருந்தே திட்டமிட வேண்டும்.

பென்சன் (Pension)

அமைப்புசாரா துறையை சேர்ந்த தொழிலாளர்கள் பென்சன் பெறுவதற்காக பிரதமர் ஷ்ரம் யோகி மாந்தன் யோஜனா (Pradhan Mantri Shram Yogi Maan-dhan) திட்டத்தை மத்திய அரசு 2019 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ், கணவன் மனைவி இருவருமே 200 ரூபாய் முதலீட்டில் 72000 ரூபாய் பென்சன் பெற முடியும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கு மாதம் தோறும் 200 ரூபாய் மட்டும் முதலீடு செய்து வந்தால் போதும். இத்திட்டம் அமைப்புசாரா தொழிலாளர்கள் பயன்பெறுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது.

18 முதல் 40 வயது வரையிலானவர்கள், மாதம் 15,000 ரூபாய் வரை வருமானம் பெறும் அமைப்புசாரா தொழிலாளர்கள் பிரதமர் ஷ்ரம் யோகி மாந்தன் யோஜனா திட்டத்தில் முதலீடு செய்யலாம். பயனாளி 60 வயதை தொட்டபின் மாதம் 3000 ரூபாய் பென்சன் கிடைக்கும். அதாவது ஆண்டுக்கு 72000 ரூபாய் பென்சன் கிடைக்கும்.

பென்சன் பெறும் காலத்தில் பயனாளி இறந்துவிட்டால் அவரது கணவர் அல்லது மனைவிக்கு 50% பென்சன் தொகை குடும்ப பென்சனாக கிடைக்கும். இத்திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புவோர் அருகில் உள்ள பொது சேவை மையத்துக்கு சென்று கணக்கை தொடங்கலாம்.

மேலும் படிக்க

அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு: செப்டம்பர் முதல் புதிய பென்ஷன் திட்டம்!

PF தகவல்கள் திருட்டு: வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்!

English Summary: Pension scheme for both husband and wife with an investment of 200 rupees! Published on: 08 August 2022, 03:29 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.