1. Blogs

முதல்வர் இல்லத்திற்கு ரூ.10,000 அபராதம் விதித்த மாநகராட்சி!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar

குப்பை கொட்டுவது தொடர்பாக மாநகராட்சியின் அறிவுறுத்தலை மீறியதற்காக, பஞ்சாப் முதல்வரின் இல்லத்திற்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் நடவடிக்கை அப்பகுதி மக்களுக்கு வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

குப்பை கொட்டுவதை நிறுத்தும்படி மாநகராட்சி பலமுறை அறிவுறுத்தியும் கேட்கவில்லை. இதையடுத்து அபராதம் விதித்துள்ள மாநகராட்சி, மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் பட்டாலியன் துணைக் கண்காணிப்பாளர் ஹர்ஜிந்தர் சிங் பெயரில் சலான் அனுப்பியுள்ளது.

புகார்

சண்டிகர் செக்டார்-2ல் 44, 45, 6 மற்றும் 7 ஆகிய எண்கள் முதல்வரின் இல்லத்தின் ஒரு பகுதியாகும். இங்கு விதிகளை மீறிகுப்பைகள் கொட்டப்படுவதாக அக்கம்பக்கத்தினர் புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து 10,000 ரூபாய் அபராதம் விதித்துள்ள மாநகராட்சி, அபராதத்தை செலுத்தும்படி, மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் பட்டாலியன் துணைக் கண்காணிப்பாளர் ஹர்ஜிந்தர் சிங் பெயரில் சலான் அனுப்பியுள்ளது. மாநகராட்சி அனுப்பி உள்ள சலானில், 'வீட்டு எண்-7, செக்டார்-2, சண்டிகர்' என்ற முகவரி குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊழியர்கள் தவறு

இது தொடர்பாக உள்ளூர் பாஜக கவுன்சிலர் மகேஷிந்தர் சிங் சித்து கூறுகையில், "முதல்வரின் இல்லத்தில் பணியாற்றும் ஊழியர்கள் குப்பைகளை வீட்டுக்கு வெளியே கொட்டுவதாக பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் புகார் தெரிவித்தனர்.

அறிவுறுத்தல்

குப்பை கொட்டுவதை நிறுத்தும்படி மாநகராட்சி பலமுறை அறிவுறுத்தியும் கேட்கவில்லை. இதனால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.செக்டார்-2ல் 44, 45, 6 மற்றும் 7 ஆகிய எண்கள் முதல்வரின் இல்லத்தின் ஒரு பகுதியாகும்" என்றார்.

மேலும் படிக்க...

உணவுப் பொருட்களுடன் கூண்டு- சிக்கிக்கொண்ட 300 குரங்குகள்!

383 கிராமங்களில் விரைவு தபால் சேவை - அதிரடி நடவடிக்கை!

English Summary: The corporation imposed a fine of Rs 10,000 on the Chief Minister's residence! Published on: 24 July 2022, 09:06 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.