1. விவசாய தகவல்கள்

பழங்கள் மற்றும் காய்கறி விற்பனை நிலையங்களில் AC அமைக்க 75% மானியம்!

Deiva Bindhiya
Deiva Bindhiya

75% subsidy for setting up AC in fruit and vegetable outlets!

விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க, பீகார் அரசு பழங்கள் மற்றும் காய்கறிகளின் ஏசி (AC) சில்லறை விற்பனை நிலையங்களை அமைப்பதற்கு 75 சதவீதம் வரை மானியம் வழங்குகிறது. பாட்னாவில் உள்ள செண்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் உடன் இணைக்கப்பட்ட தோட்டக்கலை உற்பத்தி (பழங்கள் மற்றும் காய்கறிகள்) விற்பனை மையத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் பீகார் மாநில விவசாய அமைச்சர் அமரேந்திர பிரதாப் சிங் இதனை அறிவித்தார்.

தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழும், விவசாயத் துறையின் தோட்டக்கலை இயக்குநரகத்தின் கீழும் பாட்னாவின் பந்த் பவன் பெய்லி சாலையில் உள்ள வளாகத்தில் ஏசி சில்லறை விற்பனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது என்று வேளாண் அமைச்சர் குறிப்பிட்டார். இதற்கு 'தோட்டக்கலை தயாரிப்பு விற்பனை மையம்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த மையத்தின் பரப்பளவு திட்டத்தின் படி 12 க்கு 12 அடி மற்றும் அதன் சேமிப்பு திறன் 9 மெட்ரிக் டன் ஆகும். இதில், முக்கியமாக ஆர்கானிக் மற்றும் உயர்தர பழங்கள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யப்படும் என்பது குறிப்பிடதக்கது.

இந்த காய்கறிகள் கிடைக்கும் (These vegetables are available)

உயர்தர காய்கறிகளான சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை குடமிளகாய், செர்ரி தக்காளி, விதையில்லா வெள்ளரி, கீரை, மஞ்சள் மற்றும் ஊதா காலிஃபிளவர், சிவப்பு முட்டைக்கோஸ், ப்ரோக்கோலி, காளான் மற்றும் ஹைடெக் நர்சரிகளில் உற்பத்தி செய்யப்படும் காய்கறி நாற்றுகள் விற்பனை செய்யப்படும்.

பழங்களுக்காக மட்டுமே மையங்கள் ஏற்படுத்தப்படும் (Centers will be set up only for fruits)

செண்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் - பூர்வீக முறையின் படி உற்பத்தி செய்யப்படும் பப்பாளி, மாம்பழம், லிச்சி, ஜாமுன், பிளம், கொய்யா, வாழை, ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்கள் மற்றும் பழச் செடிகள் விற்பனை செய்யப்படும். இங்கு பீகார் மாநில விதை மற்றும் கரிம சான்றளிப்பு (State Seed and Organic Certification) பெற்று, உற்பத்தி செய்யப்படும் ஆர்கானிக் காய்கறிகளும் விற்பனை செய்யப்படும்.

பீகார் மாநில தோட்டக்கலை தயாரிப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், மாவட்ட வாரியாக அடையாளம் காணப்பட்ட சிறப்பு தோட்டக்கலை பயிர்களின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களும் எதிர்காலத்தில் சேர்க்கப்படும் என்றும், இந்த மையத்தில் இருந்து விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

திட்டத்தின் பலனைப் பெறுபவர்கள் (Beneficiaries of the scheme)

தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ், தனி விவசாயி அல்லது தொழில்முனைவோருக்கு 50 சதவீத மானியமும், ஏசி (AC) அமைப்பதற்காக நிர்ணயிக்கப்பட்ட மொத்த யூனிட் செலவான ரூ.15 லட்சத்தில் எஃப்.பி.ஓ அல்லது எஃப்.பி.சி.க்கு 75 சதவீத மானியமும் வழங்கப்பட்டுள்ளதாக மாநில வேளாண் அமைச்சர் தெரிவித்தார். விவசாயிகள், உழவர் குழு, தொழில்முனைவோர் அல்லது பொதுத்துறை பிரிவு அல்லது கூட்டுறவு நிறுவனம், பதிவு செய்யப்பட்ட சங்கம் போன்றவை இத்திட்டத்தில் பயன்பெறலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க:

உடல் எடை குறைந்து ஆரோக்கியமாக வாழ, இந்த பானத்தை ட்ரை செய்தீர்களா?

பொங்கல் பரிசு வழங்க விவசாயிகளிடம் நேரடி கரும்பு கொள்முதல்

English Summary: 75% subsidy for setting up AC in fruit and vegetable outlets!

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.