1. விவசாய தகவல்கள்

திருந்திய நெல் சாகுபடி முறை குறித்து விளக்கும் வேளாண் மாணவன்

Deiva Bindhiya
Deiva Bindhiya
திருந்திய நெல் சாகுபடி முறை குறித்து விளக்கும் வேளாண் மாணவன்
Agriculture student explaining about Trintiya rice cultivation system

திருந்திய நெல் சாகுபடி முறை என்பது சாதாரண நெல் சாகுபடி முறையில் சில மாற்றங்களை ஏற்படுத்தி குறைந்த செலவில் அதிக மகசூலை பெறும் வகையில் உருவாக்கப்பட்ட முறை ஆகும்.

நெல் தீவிரப்படுத்தும் முறை (SRI) சாகுபடி:

• நர்சரி மேலாண்மை
• நாற்று தூக்குதல்
• முக்கிய கள தயாரிப்பு
• நடவு செய்தல்
• நீர்ப்பாசன மேலாண்மை
• களை மேலாண்மை
• ஊட்டச்சத்து மேலாண்மை

கொள்கைகள்:

* நன்கு தூய்மையான நெல் விதைகளை பாய் நாற்றாங்கால் முறையில் நாற்றுகளை வளர்க்க வேண்டும்.
* 10 முதல் 15 நாட்கள் வயதுடைய இளம் நாற்றுகளை ஒற்றை நாத்து நடவு முறையில் 25 செ.மீ × 25 செ.மீ என்ற இடைவெளியில் நட வேண்டும்.
* நீர் பாசனத்தை பொருத்தவரை "நீர் மறைய நீர் பய்ச்சுதல்' வேண்டும்.
* சுழல் உருளை களை எடுக்கும் கருவியை கொண்டு 12 முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை களை எடுத்தல்.

* இலை வண்ண அட்டையை (LCC)கொண்டு பயிரின் தேவைக்கு ஏற்ப தழை சத்து (N) அளிக்க வேண்டும்
* உரத்தை பொருத்தவரை தொழுஉரம் , மண்புழு உரம் போன்ற இயற்கை உரங்களை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும்.

திருந்திய நெல் சாகுபடி முறையின் பயன்கள்: 

• அதிக தூர் வெடிக்கும் வீரியம்
• அதிக தூர் வெடிக்கும் காலம்
• அதிக இடைவெளியில் ஒற்றை நாற்று சதுர நடவு
• செடிகளுக்கிடையே போட்டி குறைவு
• அதிக தூர் வெடித்தல்
• களைக் கருவி உபயோகித்தல்
• மண் கிளறி விடப்படுதல்
• பயிர் வளர்ச்சி ஊக்குவிப்பு
• நுண்ணுயிர்கள் ஊக்குவிப்பு
• சிக்கன நீர்ப் பாசனம்
• மண்ணில் காற்றோட்டம்
• 40 - 50 சதவீதம் நீர் சேமிப்பு
• ஒருங்கிணைந்த உர நிர்வாகம்

• அதிக நுண்ணுயிர்கள் செயல்பாடு
• அதிக கூட்டுப் பயன்

திருந்திய நெல்சாகுபடி (SRI) முறையை விவசாயிகள் ஏன் கடைபிடிக்க வேண்டும்?

• குறைந்த சாகுபடிச் செலவு
• ஏக்கருக்கு 2-3 கிலோ விதை போதுமானது.
• ஏக்கருக்கு 1 சென்ட் நாற்றங்கால் போதுமானது.
• குத்துக்கு ஒரு நாற்று போதுமானது.
• ஒரு சதுர மீட்டருக்கு 16 குத்துகள் போதுமானது.
• களையைக் கட்டுப்படுத்த களைக் கருவி உபயோகிப்பதால்

ஆட்செலவு குறைவு

• களைக் கருவி உபயோகிப்பதால் பயிர் வளர்ச்சி அதிகமாகிறது.
• வயலில் நீரைத் தேக்கி வைக்க வேண்டியஅவசியமில்லை
• பாசன நீர்த் தேவை 40 - 50 சதவீதம் குறைவு
• நீர்ப்பாசனத்திற்கான மின்சாரச் செலவு குறைவு
• அதிக வேர் வளர்ச்சி
• அதிக வெள்ளை நிறப் பணியாற்றும் வேர்கள்
• அதிக ஊட்டச்சத்து உபயோகத் திறன் அதிக தூர்கள்
• அதிக கதிர்கள், அதிக மணிகள்
• பயிருக்கு சாயாத தன்மை அதிகமாகிறது.
• அதிக தானிய வைக்கோல் மகசூல்
• அதிக லாபம்

மேலும் விபரங்களுக்கு:

திரு.சூர்யா மனோகரன், இளங்கலை வேளாண் மாணவன் மற்றும்
முனைவர் பா.குணா, இணைப் பேராசிரியர்,
வேளாண் விரிவாக்க துறை, நாளந்தா வேளாண்மைக் கல்லூரி, எம்.ஆர்.பாளையம், திருச்சி.
மின்னஞ்சல் baluguna8789@gmail.com. தொலைபேசி எண் : 9944641459 ஆகியோரை தொடர்புகொள்ளலாம்

மேலும் படிக்க:

பூ உதிர்வை தடுக்கும் தேமேர் கரைசல் : தயாரிக்கும் முறை இதோ!

ஹ்யூமிக் அமிலம்: மட்கிய அறிவியல் மற்றும் அது மண்ணுக்கு எவ்வாறு பயனளிக்கும்

English Summary: Agriculture student explaining about Trintiya rice cultivation system Published on: 15 March 2023, 05:19 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.