1. விவசாய தகவல்கள்

இந்தியாவில் மே மாதத்தில் உரத்தின் விலை எப்படி இருக்கும்? நிபுணர்களின் கணிப்பு

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
fertilizer price in india at may 2023 will be increase

தற்போது சந்தையிலுள்ள உரங்களின் இருப்பு, மூலப்பொருட்களின் விலையேற்றம் காரணமாக இந்தியாவில் உரங்களின் விலை மே மாதத்தில் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உரங்களின் விலை சிறிது காலமாக விவசாயிகள், கொள்கை வகுப்பாளர்கள் (policy makers) மற்றும் இந்திய விவசாயத் துறையில் பங்குதாரர்களுக்கு கவலை அளிக்கும் விஷயமாக உள்ளது. அரசாங்கத்தின் கொள்கைகள், சந்தையில் இருப்பு மற்றும் உலகளாவிய போக்குகள் இந்தியாவில் உரங்களின் விலையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

மூலப்பொருட்களின் விலையேற்றம்:

உரங்களின் விலை உயர்வுக்குக் காரணமான முதன்மையான காரணிகளில் ஒன்று மூலப்பொருட்களின் விலையேற்றம் என கருதப்படுகிறது. யூரியா, பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் போன்ற முக்கிய உள்ளீடுகளின் விலைகள் விநியோகச் சங்கிலித் தடைகள் (supply chain disruptions), அதிகரித்து வரும் போக்குவரத்து செலவுகள் மற்றும் வர்த்தகக் கட்டுப்பாடுகள் காரணமாக உலகளவில் அதிகரித்து வருகின்றன. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதும் விலை உயர்வுக்கு காரணமாக விளங்குகிறது.

உர மானியக் கொள்கை:

உரங்களின் விலையை பாதிக்கும் மற்றொரு காரணி அரசின் உர மானியக் கொள்கை. விவசாயிகளை ஆதரிப்பதற்காக அரசாங்கம் உரங்களுக்கு மானியம் அளித்து வருகிறது, ஆனால் வழங்கும் மானியமானது அதிகரித்து வரும் செலவுகளை ஈடுகட்ட போதுமானதாக இல்லை. இதனால் உர நிறுவனங்களுக்கு விலையை உயர்த்த வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

யூரியா தட்டுப்பாடு:

மேலும், யூரியா இறக்குமதியை குறைக்கும் அரசின் கொள்கையால், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உரங்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் சந்தையில் யூரியா தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை கணிசமாக உயர்ந்துள்ளது. கூடுதலாக, இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதில் அரசாங்கம் முக்கியத்துவம் தருவதால், ஒப்பீட்டளவில் விலையுயர்ந்த கரிம உரங்களுக்கான தேவை அதிகரிக்க வழிவகுத்துள்ளது.

நிலையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத தயாரிப்புகளை நோக்கி நகரும் உலகளாவிய போக்கு காரணமாக உர நிறுவனங்களும் சவால்களை எதிர்கொள்கின்றன. உயிர் உரங்கள், கரிம உரங்கள் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த உரங்களின் தேவை அதிகரிப்பதும், உற்பத்தி செலவுகள் அதிகரிக்க வழிவகுத்தது.

விவசாயத்துறையில் உள்ள பங்குதாரர்கள் தொழில்துறை எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்ளவும், மலிவு மற்றும் நிலையான உரங்கள் கிடைப்பதை உறுதி செய்யவும் புதுமையான தீர்வுகளைக் கண்டறிய ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

உரத்தொழில் துறையினர் சவால்களை எதிர்கொண்டுள்ள போதிலும், உர விலைப் பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. விவசாயிகளின் சுமையை குறைக்கும் வகையில் உர மானியத்தை ஒன்றிய மற்றும் சில மாநில அரசுகள் உயர்த்தியுள்ளது. கூடுதலாக, குறைந்த விலை மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த யூரியா போன்ற மாற்று உரங்களின் பயன்பாட்டை அரசாங்கம் ஊக்குவித்து வருகிறது.

மேற்கண்ட காரணிகளின் அடிப்படையான மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் உலகளாவிய போக்குகள் காரணமாக இந்தியாவில் உரங்களின் விலை மே 2023 இல் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வாறாயினும், விவசாயிகளின் சுமையை குறைக்கும் மற்றும் நிலையான விவசாயத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் முன்முயற்சிகள் சந்தையில் விலை உயர்வை கட்டுபடுத்த உதவும் என கருதலாம்.

pic courtesy - pexels

மேலும் காண்க:

WhatsApp செயலில் அட்டகாசமான புதிய அம்சம் - மார்க் கொடுத்த சர்ப்ரைஸ்!

English Summary: fertilizer price in india at may 2023 will be increase Published on: 26 April 2023, 01:54 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.