1. விவசாய தகவல்கள்

30ம்தேதி வரை அடிச்சுத்தாக்கப்போகுது கனமழை- இந்த லிஸ்ட்டில் உங்கள் ஊர் இருக்கா?

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Heavy rain is going to hit till the 30th- Is your town on this list?

வெப்பச்சலனம் காரணமாக, காரணமாகத் தமிழகத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, தேனி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது:

26.08.21

கனமழை (Heavy rain)

  • செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, தேனி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்.

  • தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

  • ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

27.08.21

கனமழை (Heavy rain)

செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, தேனி, திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

28.08.21

மிக கனமழை (Very heavy rain)

வளிமண்டலத்தில் ஈரப்பதத்துடன் கூடிய மேற்கு திசை காற்று வலுவடைந்ததன் காரணமாக, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை மாவட்டங்களில் கனமழை முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

29.08..21

நீலகிரி, கோவை, திருப்பூர், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை முதல் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தேனி, விருதுநகர், தூத்துக்குடி, சேலம், ஈரோடு, தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

30.08.21

நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை முதல் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

சென்னை (Chennai)

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசானது மழைக்கு வாய்ப்பு உள்ளது.

வெப்பநிலை (Temperature)

வெப்பநிலை அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸையும் ஒட்டியே இருக்கும்.

மழை பதிவு (Rainfall)

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அனந்தபுரத்தில்  10 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை (Warning for fishermen)

வங்கக்கடல் பகுதிகள் (Areas of the Bay of Bengal)

26.08.21 முதல் 28.08.21 வரை

மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் பலத்தக் காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள் (Areas of the Arabian Sea)

29.08.21 முதல் 30.08.21 வரை

கேரளக்கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவுப் பகுதிகளில் பலத்தக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

26.08.21 முதல் 30.08.21 வரை

தென் மேற்கு, வடக்கு மற்றும் மத்திய அரபிப் கடல் பகுதிகளில் பலத்தக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

எனவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

முருங்கைக்கீரையில் இவ்வளவு நன்மைகளா-

English Summary: Heavy rain is going to hit till the 30th- Is your town on this list? Published on: 26 August 2021, 05:03 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.