1. விவசாய தகவல்கள்

விளைபொருட்கள் அடகு வைத்து ரூ.75 லட்சம் வரை கடன் பெறலாம்| இயந்திர வாடகை மையம் நிறுவ 80% மானியம்

Deiva Bindhiya
Deiva Bindhiya

சிறு, குறு விவசாயிகள் ஒருங்கிணைந்து பதிவு செய்த விவசாய சங்கங்கள் / உழவன் உற்பத்தியாளர் குழுக்களுக்கு வேளாண் இயந்திரங்கள், கருவிகள் உபகரணங்களை ரூ.10லட்சம் மதப்பீட்டில் வாங்கி கிராம அளவில் வாடகை மையம் அமைப்பதற்கு 80% மானியம் அதிகபட்சமாக ரூ.8லட்சம் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற, திரையில் தோன்றும் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

2.விவசாயிகள் விளைபொருட்களை அடகு வைத்து ரூ. 75லட்சம் வரை கடன் பெறலாம்

மத்திய உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் வரும் கிடங்கு மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையத்தில் (WDRA) பதிவுசெய்யப்பட்ட கிடங்குகளில் விவசாயப் பொருட்களை அடகு வைத்து விவசாயிகள் இப்போது கடன் பெறலாம். சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூரில் கடந்த வாரம் இத்திட்டம் தொடங்கப்பட்டது. WRDA-அங்கீகரிக்கப்பட்ட களஞ்சியங்களில் விளைபொருட்களை சேமித்து வைக்கும் விவசாயிகளுக்கு மின்னணு கிடங்கு ரசீதுகள் (eNWRs) வழங்கப்படும். ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, மொத்த விவசாய உற்பத்தி மதிப்பில் 25 முதல் 35% (ரூ. 75 லட்சம் வரை) தனிநபர் ஒருவர் eNWRக்கு எதிராக 12 மாதங்களுக்கு 7% வட்டியில் வங்கிகளில் இருந்து கடன் பெறலாம்.

3.பசுமை குடில் அமைத்து ரோஜா மலர்கள் உற்பத்தியை பார்வையிட்டார் - MRK பன்னீர்செல்வம்

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, தேவகானப்பள்ளி ஊராட்சியில் தமிழக அரசின் தோட்டக்கலைத் துறை சார்பாக 8,90,000 மானியத்தில் 2000 சதுர மீட்டர் பரப்பளவில் பசுமை குடில் அமைத்து ரோஜா மலர்கள் உற்பத்தி செய்யப்படுவதை சட்டமன்ற உறுப்பினர் வய்.பிரகாஷ், தோட்டக்கலைத் துறை இயக்குனர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் பார்வையிட்டார், வேளாண் மற்றும் உழவர் நலுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அவர்கள்.

4.நாமக்கல் முட்டை இறக்குமதியை கத்தார் உயர்த்தியது: உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி

நாமக்கல் : மாவட்ட கோழிப்பண்ணையாளர்களுக்கு ஃபிபா உலகக் கோப்பை வரப்பிரசாதமாக மாறி வருகிறது - கத்தாருக்கு முட்டை ஏற்றுமதி 1.5 கோடியில் இருந்து 3 கோடியாக அதிகரித்துள்ளது. உக்ரைன் மற்றும் துருக்கி ஆகியவை உலகின் முக்கிய முட்டை உற்பத்தியாளர்களாகும் என்று சுட்டிக்காட்டிய மாவட்ட முட்டை ஏற்றுமதியாளர்களில் ஒருவரான பி வி செந்தில், ரஷ்யாவுடனான போரைத் தொடர்ந்து உக்ரைன் தனது சந்தையை இழந்துவிட்டது என்றார். “எனவே, துருக்கி கத்தாரில் இருந்து ஆர்டர்களைப் பெறும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், அந்த ஆர்டர்கள் எங்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது என்பதில் மிக்க மகிழ்ச்சி என தெரிவித்தார்.

5.உயர் விளைச்சலுக்கு ஏற்ற உளுந்து ரகங்கள்: வேளாண் அமைச்சகம் ஆலோசனை

உயர் விளைச்சலுக்கு ஏற்ற உளுந்து ரகங்கள் என வேளாண் அமைச்சகம் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிட்ட உளுந்து ரகங்கள், வம்பன் 8 அனைத்து பருவங்களுக்கும் ஏற்றது, வம்பன் 10 ராபி பருவத்திற்கு ஏற்றது, மற்றும் வம்பன் 11 அனைத்து பருவங்களுக்கும் ஏற்றது. மேலும் விபரங்களுக்கு அருகிலுள்ள வேளாண் விரிவாக்க மையங்களை அணுகுங்கள்.

6. விவசாயிகளுக்கு உதவ ஜேர்மனியுடன் TNAU கைகோர்ப்பு: புது காலநிலை இடர் காப்பீடு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் ரிமோட் சென்சிங் மற்றும் GIS துறையானது, வானிலை, தொலை உணர்தல் மற்றும் நீரியல் தரவுகளைப் பயன்படுத்தி விவசாய வறட்சி, வெள்ளம் மற்றும் சூறாவளிகளைக் கண்காணிப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பிரதம மந்திரி பசல் பீமா யோஜனாவை (PMFBY) திறம்பட செயல்படுத்துவதற்காக தொலைநிலை உணர்திறனைப் பயன்படுத்தி நிகழ்நேரத்தில் தமிழ்நாட்டில் இந்த நிகழ்வுகளைக் கண்காணிக்க ஒரு மாறும் டிஜிட்டல் தரவுத்தளத்தை உருவாக்குவதையும் பராமரிப்பதையும் இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவித்தார், TNAU துணைவேந்தர் Dr.V.கீதாலட்சுமி.

மேலும் படிக்க: PM Kisan நிதி பெறுவதில் சிக்கல்: இந்த எண்களை தொடர்பு கொள்ளவும் | விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் தேதி மற்றும் இடம்

7.நிதியமைச்சர் நீர்மலா சீதாராமன் தலைமையில் 2023-24 நிதியாண்டு பட்ஜெட் கூட்டம்

புது தில்லியில் ஒன்றிய அரசின் நிதி அமைச்சர் திருமதி சீதாராமன் அவர்களின் தலைமையில், ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை 2023-24க்கான முந்தைய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிதி மற்றும் மணிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடதக்கது.

8. இந்தியாவின் வெண்மைப் புரட்சியின் தந்தை 101வது பிறந்தநாள் கொண்டாட்டம்

"இந்தியாவின் வெண்மைப் புரட்சியின் தந்தை", இந்தியாவின் Milk Man என்று அழைக்கப்படும் டாக்டர். வர்கீஸ் குரியன் அவர்களின் 101வது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், "Azadi Ka Amrit Mahotsav"யின் ஒரு பகுதியாக, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை "தேசிய பால் தினத்தை" 26 நவம்பர் 2022 அன்று பெங்களூருவில் கொண்டாடுகிறது. இந்த நிகழ்வின் போது மதிப்புமிக்க தேசிய கோபால் ரத்னா விருதுகள் 2022 வழங்கப்படும். இந்திய அரசு, கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத் துறை, கர்நாடகா அரசு, தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் மற்றும் கர்நாடகா பால் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து இந்த தேசிய நிகழ்வை கர்நாடக மாநிலத்தில் ஏற்பாடு செய்துள்ளன என்பது குறிப்பிடதக்கது.

9. வானிலை தகவல்

இன்று மற்றும் நாளை தமிழ்நாடு , புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.

மேலும் படிக்க:

வாடகை மையம்‌ நிறுவ ரூ.60 லட்சம்‌ மானியம்‌| மழை, வெள்ளம் குறித்து புகார் இதோ Whatsapp No.| செய்திகள்

PM Kisan நிதி பெறுவதில் சிக்கல்: இந்த எண்களை தொடர்பு கொள்ளவும் | விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் தேதி மற்றும் இடம்

English Summary: loan up to Rs.75 lakh by pledging the produce| 80% subsidy for setting up machine rental centre Published on: 25 November 2022, 06:59 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.