1. விவசாய தகவல்கள்

PM Kisan : விவசாயிகளின் வங்கிக்கணக்கில் விரைவில் 8-வது தவணை- உங்கள் கணக்கை Check செய்ய எளிய டிப்ஸ்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
PM Kisan: 8th installment in farmers' bank account soon

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் எட்டாவது தவணைப் பணத்தை மத்திய அரசு விரைவில் டெபாசிட் செய்ய உள்ளது. எனவே பயனாளிகளின் பெயர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா, இல்லையா என்று செக் (Check) பண்ணலாம்.

பிஎம் கிசான் திட்டம் (PM- Kisan Scheme)

பிரதமரின் கிசான் சம்மான் நிதி (pm kisan samman nidhi yojana) எனப்படும் பிரதமரின் விவசாய நிதியுதவித் திட்டத்தீன் கீழ் நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணைகளாக ரூ.6,000 நிதியுதவியை மத்திய அரசு வழங்கி வருகிறது.

மத்திய அரசின் திட்டம் (Union Government Scheme)

2018ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் இந்தத் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து இத்திட்டத்துக்கான நிதியுதவியை மத்திய அரசு விரைந்து வழங்கி வருகிறது.

பெறத் தகுதியுள்ளவர்கள் யார்? (Who is eligible to receive?)

பயிரிடக்கூடிய நிலங்களைத் தங்களது பெயரில் வைத்திருக்கும் விவசாயிகளின் குடும்பங்கள் பிரதமர் கிசான் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்.
கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

தகுதி இல்லை (Not eligible)

அதேநேரம், நிறுவன விவசாயிகள், மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளின் ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், அரசியலமைப்பு பதவிகளை வகிக்கும் உழவர் குடும்பங்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பொறியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் மாதத்திற்கு 10,000 ரூபாய்க்கும் அதிகமான ஓய்வூதியம் பெறுபவர்கள் போன்றோர் இந்த நிதியுதவிக்கு விண்ணப்பிக்கத் தகுதி இல்லை.

8-வதுத் தவணை (8th installment)

  • ஒவ்வொரு நிதியாண்டிலும் முதல் தவணைப் பணம் ஏப்ரல் - ஜூலைக்குள் செலுத்தப்பட உள்ளது. இந்தத் தவணைப் பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.

  • இதற்கு முந்தைய தவணை கடந்த ஆண்டு (2020) டிசம்பர் 25ம் தேதி மத்திய அரசால் வழங்கப்பட்டது.

  • இந்நிலையில் எட்டாவது தவணைப் பணம் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் விரைவில் செலுத்தப்பட உள்ளது. ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான 4 மாதங்களில் எப்போது வேண்டுமானாலும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் வந்து சேரலாம் என்று கூறப்பட்டுள்ளது.

செக் (Check)செய்வது எப்படி?

  • பிஎம் கிசான் அதிகாரப்பூர்வ இணையதளமான https://pmkisan.gov.in/ என்பதில் சென்று நீங்களே பணம் வந்துவிட்டதா, இல்லையா என்று பார்க்கலாம்.

  • இந்த இணையப் பக்கத்தை ஓப்பன் செய்தால் அதில்Farmers Corner என்ற வசதி இருக்கும். அதை கிளிக் செய்யவும்.

  • beneficiary status அல்லது beneficiary list என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும்.

  • இதை ஓப்பன் செய்தவுடன் புதிய திரை ஒன்று வரும். அதில் ஆதார் எண், மொபைல் எண் போன்ற விவரங்கள் வரும்.

  • அதைப் பூர்த்தி செய்து சமர்ப்பித்தால் உங்களுக்குத் தேவையான தகவல் அதில் கிடைக்கும்.

  • ஒருவேளை உங்களது திரையில் ’FTO is generated and Payment confirmation is pending’ என்ற தகவல் குறிப்பு இருந்தால் உங்களது பணத்தை டெபாசிட் செய்யும் பணி நடந்துவருகிறது.

  • Waiting for approval by state mean என்று வந்தால், மாநில அரசின் ஒப்புதலுக்குக் காத்திருப்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.

  • விரைவில் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் என்று புரிந்துகொள்ளலாம்.

மேலும் படிக்க...

வறட்சிகாலத்தில் பயிருக்கு உயிரூட்டும் திரவ நுண்ணுயிர் உரங்கள்!!

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் ரூ.7,000? முழு விபரம் உள்ளே!

கொரோனா தடுப்பு மருந்து செலுத்தும் வேகத்தில், உலக அளவில் இந்தியா முதலிடம்

English Summary: PM Kisan: 8th installment in farmers' bank account soon Published on: 29 April 2021, 10:03 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.