1. விவசாய தகவல்கள்

PM Kisan: விட்டுப்போன விவசாயிகளுக்கு பணம் இந்தத் தேதியில்தான் வரும்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Left farmers will get money only on this date!

பிஎம் கிசான் திட்டத்தில் இன்னும் பணம் வராத விவசாயிகளுக்கு குறிப்பிட்ட இந்த தேதியில்தான் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, இதுவரை தங்கள் வங்கிக்கணக்கில் பணம் வந்து சேராத விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.6,000

விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்குவதற்காக 2019ஆம் ஆண்டில் பிரதமரின் கிசான் சம்மன் நிதி திட்டம் (PM Kisan Samman Nidhi Yojana) அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தலா 6000 ரூபாய் வழங்கப்படுகிறது. காலாண்டுக்கு ஒருமுறை 2000 ரூபாய் விவசாயிகளுக்கு அனுப்பிவைக்கப்படும்.

12ஆவது தவணை

ஏற்கெனவே 11 தவணைகள் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் பணம் அனுப்பப்பட்டுவிட்டது. இந்நிலையில், கடந்த 17ம் தேதி 12-வது தவணை தொகையை பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார்.சுமார் 11 கோடி தகுதியுள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் பணம் 16000 கோடி ரூபாய் செலுத்தப்பட்டது.
இதன்படி, 11 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கே நேரடியாக 2000 ரூபாய் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஏமாற்றம்

ஆனால் இன்னும் பல விவசாயிகள் இந்தப் பணத்தைப் பெறவில்லை. ஒருவேளை உங்கள் கணக்கில் பணம் வரவில்லை என்றால் என்ன காரணம் என்று தெரிந்து கொள்ளுங்கள். இத்திட்டத்தின் கீழ் நடைபெறும் மோசடிகளை தடுக்க மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டில் உள்ள லட்சக்கணக்கான தகுதியற்றவர்கள் அரசின் இந்த திட்டத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

நவ.30

இதைத் தடுக்கும் வகையில் eKYC என்ற வசதி அரசால் தொடங்கப்பட்டுள்ளது. எனவே பிஎம் கிசான் கணக்கில் eKYC செய்யப்படாத விவசாயிகளுக்கு பணம் வராது. 12ஆவது தவணைப் பணம் அக்டோபர் 17ஆம் தேதி விவசாயிகள் கணக்கில் விடுவிக்கப்பட்டது. இப்பணி இன்னும் ஒரு மாதத்துக்கு தொடர்ந்து நடைபெறும். அதாவது, நவம்பர் 30ஆம் தேதிக்குள் தகுதியுள்ள விவசாயிகள் அனைவருக்கும் தவணைப் பணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

என்ன செய்யவேண்டும்?

  • முதலில் உங்களுடைய கணக்கில் பணம் வந்துவிட்டதா என்பதைப் பார்க்க வேண்டும்.

  • ஒருவேளை சில காரணங்களுக்காக பணம் வராமல் போகலாம். அதுகுறித்த நிலவரத்தை பிஎம் கிசான் இணையதளத்திலேயே நீங்கள் பார்க்கலாம்.

  • முதலில் பிஎம் கிசான் திட்டத்தின் அதிகாரபூர்வ வெப்சைட்டிற்குள் செல்லவும்.

    அதன் பிறகு, பயனாளியின் நிலையை (BeneficiaryStatus.aspx)

    கிளிக் செய்யவும்.

  • இப்போது உங்களுடையள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட்ட பிறகு கேப்ட்சா குறியீட்டை நிரப்பி சமர்ப்பிக்கவும்.

மேலும் படிக்க...

அரசு ஊழியர்களுக்கு 10% போனஸ் - தமிழக அரசு அறிவிப்பு!

வட்டியை உயர்த்திய வங்கி- வாடிக்கையாளர்களுக்கு அதிக லாபம்!

English Summary: PM Kisan: Left farmers will get money only on this date! Published on: 25 October 2022, 05:25 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.