1. விவசாய தகவல்கள்

PMFBY: இந்த மாநில விவசாயிகள் பயிர் காப்பீட்டின் அதிகபட்ச பலனைப் பெற்றனர்!

Aruljothe Alagar
Aruljothe Alagar
PMFBY: Farmers in this state get maximum benefit from crop insurance!

பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா (PMFBY) திட்டத்தின் கீழ், விவசாயிகளின் பயிர்க் காப்பீட்டுத் தொகை முந்தைய ஆண்டை விட 2020-21 பயிர் ஆண்டில் 60 சதவீதம் குறைந்து ரூ. 9,570 கோடியாக குறைந்துள்ளது.

இத்தகவல் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களில் இருந்து கிடைத்துள்ளது. ஏனெனில், அந்த ஆண்டில் பெரிய பயிர்களுக்கு பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை. இருப்பினும், 2020-21 மற்றும் 2019-20 ஆகிய பயிர் ஆண்டுகளுக்கான பயிர்க் காப்பீட்டுக் கோரிக்கைகளில் பெரும்பாலானவற்றை அரசாங்கம் தீர்த்து வைத்துள்ளது. 2019-20 பயிர் ஆண்டில் பயிர்க் காப்பீட்டுத் தொகை ரூ. 27,398 கோடியாக இருந்தது.

PMFBY பழைய பயிர் காப்பீட்டு திட்டங்களில் சீர்திருத்தங்களுடன் 2016-17 இல் தொடங்கப்பட்டது. திட்டத்தின் செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் ரபி 2018 மற்றும் காரீஃப் 2020 இல் திருத்தப்பட்டன. இத்திட்டத்தின் பலன்களை விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் சென்றடைவதே இதன் நோக்கம். தரவுகளின்படி, 2020-21ல் 612 லட்சம் விவசாயிகள் 445 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்களுக்கு காப்பீடு செய்துள்ளனர். இதன் கீழ், காப்பீட்டுத் தொகை ரூ. 1,93,767 கோடியாக இருந்தது. 2020-21 ஆம் ஆண்டில் மொத்த உரிமைகோரல்கள் ரூ. 9,570 கோடியாக இருந்தது. காப்பீட்டுக் கோரிக்கைகள் காரீஃப் பருவத்தில் ரூ. 6,779 கோடியாகவும், ரபி பருவத்தில் ரூ. 2,792 கோடியாகவும் இருந்தது.

2020-21 இல் காப்பீட்டு கோரிக்கைகளில் குறைவு

வேளாண் அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் PTI- மொழியிடம் கூறுகையில், “2020-21ல் ரூ. 9,570 கோடி மதிப்புள்ள காப்பீட்டுக் கோரிக்கைகள் குறிப்பிடத்தக்க அளவில் குறைவாக இருந்தன. ஏனெனில், அந்த ஆண்டில் பெரிய பயிர்களுக்கு பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை. இதன் போது, ​​அதிகபட்சமாக ரூ. 3,602 கோடி மதிப்பிலான பயிர் காப்பீடு கோரிக்கைகள் ராஜஸ்தானில் இருந்து வந்துள்ளது. அதன்பிறகு மகாராஷ்டிரா ரூ. 1,232 கோடியுடன் இரண்டாவது இடத்தையும், ரூ. 1,112.8 கோடியுடன் ஹரியானாவும் உள்ளன.

2019-20 பயிர் ஆண்டில், 613 லட்சம் விவசாயிகள் 501 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்களுக்கு காப்பீடு செய்துள்ளனர். இதில் காப்பீடு செய்யப்பட்ட தொகை ரூ. 2,19,226 கோடி. 2019-20 பயிர் ஆண்டில், காரீஃப் பருவத்தில் ரூ. 21,496 கோடி மதிப்புள்ள காப்பீட்டுக் கோரிக்கைகள் வந்துள்ளன. அதே நேரத்தில், ரபி பருவத்தில் இந்த எண்ணிக்கை ரூ.5,902 கோடியாக உள்ளது. 2019-20 பயிர் ஆண்டில், அதிகபட்சமாக 6,757 கோடி ரூபாய் மதிப்புள்ள காப்பீட்டுக் கோரிக்கைகள் மகாராஷ்டிராவில் இருந்து வந்துள்ளது. அதன்பிறகு ஹரியானா ரூ. 5,992 கோடியும், ராஜஸ்தான் ரூ. 4,921 கோடியும் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தன.

பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா திட்டத்தை பிரதமர் மோடி 2016 இல் தொடங்கினார்

மத்திய விவசாய அமைச்சகத்தின் கீழ் உள்ள பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா (PMFBY) 18 பிப்ரவரி 2016 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது. விவசாயிகளுக்கு, இந்தத் திட்டம் அவர்களின் பயிர்களின் விளைச்சலுக்கான காப்பீட்டுச் சேவையாகும் மற்றும் பயிர் தோல்விக்கு எதிராக விரிவான காப்பீட்டுத் தொகையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை உறுதிப்படுத்த உதவுகிறது.

PMFBY அனைத்து உணவு மற்றும் எண்ணெய் வித்து பயிர்களையும் உள்ளடக்கியது.

மேலும் படிக்க: 

PMFBY: பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?

English Summary: PMFBY: Farmers in this state get maximum benefit from crop insurance! Published on: 01 November 2021, 11:53 IST

Like this article?

Hey! I am Aruljothe Alagar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.