பென்சன் வரம்பு உயர வாய்ப்பு! விவரம் உள்ளே

Deiva Bindhiya
Deiva Bindhiya
Government announces increase in pension limit

தேசிய பென்சன் திட்ட (NPS) சந்தாதாரர்கள் இனி முதலீட்டு முறையை மாற்றிக்கொள்ள முடியும் என பென்சன் ஒழுங்குமுறை ஆணையம் (PFRDA) அறிவித்துள்ளது. இதுகுறித்து பென்சன் ஒழுங்குமுறை ஆணையம் ட்விட்டரில், தேசிய பென்சன் திட்ட சந்தாதாரர்கள், தங்கள் முதலீட்டு முறையை ஒரு நிதியாண்டுக்கு நான்கு முறை மாற்றிக்கொள்ள விரைவில் அனுமதிக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறது.

தேசிய பென்சன் திட்ட சந்தாதாரர்கள் முதலீட்டு முறையை மாற்றுவதற்கான வரம்பை உயர்த்தும்படி கோரிக்கை வலுப்பெற்று வந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஒரு நிதியாண்டுக்கு நான்கு முறை வரை முதலீட்டு முறையை மாற்ற அனுமதிக்கப்படும் என பென்சன் ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்து, பென்சன் திட்ட (NPS) சந்தாதாரர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தற்போதைய சூழலில் தேசிய பென்சன் திட்டத்தில் சந்தாதாரர்கள் தங்கள் முதலீட்டு முறையை ஒரு நிதியாண்டுக்கு இரண்டு முறை மட்டுமே மாற்றிக்கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த வரம்பை உயர்த்த வேண்டுமென கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருந்தன. ஆனால் அரசு தரப்பில் எந்த முயற்சியும் காணப்படவில்லை.

இந்த நிலையில், தேசிய பென்சன் திட்டத்தில் முதலீட்டு முறையை ஆண்டுக்கு நான்கு முறை வரை மாற்றிக்கொள்ள அனுமதிக்கப்படும் என பென்சன் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் சுப்ரதிம் பந்தியோபாத்யாய் தெரிவித்துள்ளார்.

குறைந்தபட்ச மாத பென்ஷன் 9000 ரூபாயாக உயர வாய்ப்புக்கான தகவலும் வெளிவந்தது (the minimum monthly pension may rise to 9000 rupees)

விரைவில் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியம் அதாவது EPFO Pension Scheme ஒன்பது மடங்கு வரை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.9,000மாக உயர்த்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்படுகின்றன. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் (Employees Pension Scheme) சந்தாதாரர்களுக்காக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

பிப்ரவரியில் முடிவு அறிவிக்கப்படலாம் (Results may be announced in February)

இது குறித்து தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தின் கூட்டத்தில் பிப்ரவரி மாதத்தில், தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியம் அதாவது (Minimum Monthly Pension) பற்றிய முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படலாம். ஏற்கனவே இது குறித்து பல்வேறு கோரிக்கைகள் இருப்பது குறிப்பிடதக்கது, எனவே முக்கிய அறிவிப்புகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும் என ஓய்வூதியர்கள் (Pensioners) நீண்ட நாட்களாக அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து பலமுறை விவாதமும் நடந்துள்ளது. இது மட்டுமின்றி நாடாளுமன்ற நிலைக்குழுவும் இது தொடர்பாக ஆலோசனைகளை வழங்கியிருந்தது. குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் தற்போது குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உயர்த்துவது குறித்து முடிவெடுக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க:

கவனம்! RD கணக்கு மூலம் பணத்தை சேமிப்பவர்கள்! கவனம்

தபால் அலுவலக சிறு சேமிப்புக் கணக்கை எவ்வாறு திறப்பது? தேவையானவை

English Summary: Government announces increase in pension limit! Details inside Published on: 20 January 2022, 11:31 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.