PM- Kisan: ஆகஸ்ட் மாதம் உங்களுக்கு 2000 உண்டா? உங்கள் நிலையை அறிவது எப்படி!

Daisy Rose Mary
Daisy Rose Mary
Image credit by: Dreamstime

பிரமரின் கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த விவசாயிகளுக்கு மத்திய அரசு தனது 6-வது தவணையை வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி செலுத்த முதல் செலுத்த திட்டமிட்டுள்ளது. விவசாயப் பயனாளியான உங்களுக்கு பணம் வரவில்லை என்றால், ஒரு தொலைபேசி அழைப்பை மேற்கொள்வதன் மூலம் உங்களுக்கு பணம் கிடைக்குமா இல்லையா என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

PM-Kisan திட்டம்


பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (PM Kisan Samman Nidhi Yojana) எனப்படும் பிரதமரின் விவசாய நிதித் திட்டத்தீன் கீழ் ஏழை விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணைகளாக ரூ.6,000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதியைப் பெற விவசாயிகள் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தில் இணைந்திருக்கவேண்டும்.

அடுத்த தவணை எப்போது?

இந்த திட்டத்தில் இணைக்கப்பட்ட விவசாயிகளுக்கு கொரோனா ஊரடங்கு காலத்தில் மத்திய அரசு இந்த ஆண்டுக்கான முதல் தவணையை விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான இரண்டாவது தவணை வருகிற ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

PAN card வைத்திருப்பவர்கள் இதனை உடனே செய்யுங்கள்

இந்நிலையில் இந்த திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெற முடியாத விவசாயிகள் 011-24300606 என்ற இலவச எண்ணுக்கு அழைப்பு விடுத்து தங்களது வங்கி கணக்கு வரவு விபரங்களைச் சரிபார்த்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தவணை கிடைக்கவில்லையா?

நிதி உதவு பெற தகுதி பெற்றிருந்தும் உங்களுக்கு பிரதமர் கிசான் யோஜனாவின் பலனைப் பெறமுடியவில்லை என்றால், நீங்கள் சமர்ப்பித்த ஆவணங்களில் ஏதேனும் சிக்கல் இருக்கலாம், ஆதார் அட்டையில் உங்கள் பெயர் வங்கிக் கணக்கில் இருந்ததைவிட வித்தியாசமாக இருக்கலாம்.

இதனை நீங்கள் pmkisan.gov.in வின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று சரி செய்துக்கொள்ள முடியும், உங்கள் பெயர் தவறாக இருந்தால் மட்டுமே அதை ஆன்லைனில் சரிசெய்ய முடியும். வேறு ஏதேனும் தவறு இருந்தால், நீங்கள் வேளாண்மைத் துறையை தொடர்பு கொள்ள வேண்டும்.

PM-Kisan; திட்டத்தில் நீங்கள் இணைந்துவிட்டீர்களா? இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்!!

9.59 கோடி விவசாயிகளுக்கு நிதியுதவி

இந்த திட்டத்தின் கீழ் இதுவரையில் 9.59 கோடி விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேபோல, இத்திட்டத்தில் இணைந்து பயன்பெறத் தகுதியுள்ள விவசாயிகள் இன்னும் 5 கோடி பேர் இணையாமல் இருப்பதாகவும், அவர்கள் விரைவில் இணைந்து பயன்பெற வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அளிக்கும் கிசான் கிரெடிட் கார்டு! - விண்ணப்பிப்பது எப்படி?

English Summary: PM Kisan Samman Nidhi Yojana: Find a Easiest Way to Know About your status and Will you Next Installment Published on: 17 June 2020, 03:52 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.