பஞ்சகவ்யா- மீன் அமிலம் வேளாண் இடுபொருள் மையம் நிறுவ 1 லட்சம் மானியம்

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
1 lakh subsidy for Organic Agriculture Input Manufacturing Centre

2023-2024 ஆம் ஆண்டு மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், இயற்கை வேளாண் இடுபொருள் தயாரித்தல் மையம் நிறுவ ரூ.1 இலட்சம் மானியம் வழங்கப்படுவதாக நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு வேளாண் உற்பத்தியையும், விவசாயிகளின் நிகர வருமானத்தையும் அதிகரித்திட வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் வேளாண் இயந்திரமயமாக்குதல் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதனைப்போன்று மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டம், கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம் போன்றவற்றின் மூலமும் விவசாயிகளின் நலனில் கவனம் செலுத்தி வருகிறது.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மைத் துறை மூலம் 2023-2024 ஆம் ஆண்டில் மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், மண்புழு உரம், பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், அமிர்தகரைசல், மீன் அமிலம் போன்ற இயற்கை வேளாண்மை இடுபொருட்கள் தயாரித்து, விற்பனை செய்திட இயற்கை வேளாண்மை இடுபொருள் மையம் நிறுவ, ஆர்வமுள்ள உழவர் குழுக்களுக்கு மானிய உதவியாக குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.1 இலட்சம் வீதம் 3 குழுக்களுக்கு ரூ.3 இலட்சம் மானியம் வழங்கப்படவுள்ளது.

சிறு, குறு மற்றும் பெண் விவசாயிகள் அடங்கிய குழுவிற்கு முன்னுரிமை அளிக்கப்படும். குழுவினர் தங்களது இயற்கை வேளாண் இடுபொருட்களின் உற்பத்தி அலகினை ஒரு செயல் விளக்க அலகாகப் பராமரிக்க அனுமதிக்க வேண்டும். இது தொடர்பான உறுதிமொழிப் பத்திரம் பயனாளிகளிடம் பெற்றுக் கொள்ளப்படும்.

தேர்வு செய்யப்பட்ட பின் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் குழுக்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு உற்பத்தியைத் தொடர வேண்டும். மானியம் பெறும் குழு திட்டக் கூறுகளை செயல்படுத்தும் போதும், செயல்படுத்திய பின்பும் புகைப்பட ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

திட்டத்தில் பயன்பெற விரும்பும் குழுக்கள் முழு முகவரியுடன் குழுவின் பெயர், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, குழுவின் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் மற்றும் விரிவான திட்ட அறிக்கையினை (Detailed Project Report) வருகிற ஆகஸ்ட் 10-க்குள் சம்மந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

எனவே, விருப்பமுள்ள குழுக்கள் இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெற வேண்டுமென நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., தகவல் தெரிவித்துள்ளார். முன்னதாக நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் அரசின் நலத்திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, தொப்பம்பட்டி ஊராட்சியில் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 15 விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் உமா வழங்கினார்.

pic courtesy: nursery live

மேலும் காண்க:

தக்காளியை தொடர்ந்து சின்ன வெங்காயம்- மதுரை மார்கெட் நிலவரம்

கஷ்டமே இல்லாம மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய சூப்பர் சான்ஸ்

English Summary: 1 lakh subsidy for Organic Agriculture Input Manufacturing Centre Published on: 26 July 2023, 11:49 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.