சென்னையில் தொழில் முனைவோர்களுக்கான விழிப்புணர்வு முகாம்- யாரெல்லாம் பங்கேற்கலாம்?

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Awareness camp for entrepreneurs in Chennai held on march 14

சென்னையிலுள்ள தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில் வரும் மார்ச் மாதம் 14 ஆம் தேதி தொழில் முனைவோர்க்கான விழிப்புணர்வு முகாம் நடைப்பெறவுள்ளது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசு படித்த மற்றும் முதல் தலைமுறை தொழில் முனைவோர்களை உருவாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வகுத்து செயல்படுத்தி வருகிறது. தொழில் முனைவோர்களுக்கு திறம்பட பயிற்சி வழங்கி, தொழில் தொடங்குவதற்கான வங்கி கடன்களையும் பெற வழிவகை மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில் சென்னையிலுள்ள தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில் வரும் மார்ச் மாதம் 14 ஆம் தேதி தொழில் முனைவோர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெறுகிறது. மேற்கண்ட முகாம் காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணி வரை நடைபெறும் எனவும் சுயமாக தொழில் தொடங்க விரும்பும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற் கட்டமாக, சொந்தமாக தொழில் தொடங்குவதில் உள்ள நன்மைகள், தொழில் வாய்ப்புகள், தொழிலை தெரிவு செய்து எப்படி தொழில் துவங்கவிருக்கும் முனைவோருக்கு அரசு மற்றும் பிற நிறுவனங்கள் வழங்கும் உதவிகள் மற்றும் திட்டங்கள் ஆகியன பற்றி இம்முகாமில் விவரிக்கப்படும். பயிற்சி முகாமின் இறுதியில் தொழில் தொடங்க விரும்பும் நபர்களின் பெயர்கள் பெறப்பட்டு அவர்கள் அடுத்த கட்ட பயிற்சிக்கு அழைக்கப்படுவர்.

அடுத்த கட்டமாக 3 நாள் திட்ட அறிக்கை தயாரித்தல் பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டு அவர்களுக்கு நிதி உதவிகள் பெற ஆலோசனைகள் வழங்கப்படும். மாவட்ட தொழில் மையங்களோடு இணைந்து 5 நாள் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சிகளும் EDII வழங்கி வருகிறது. இப்பயிற்சி மூலம் நிதி உதவி பெறும் திட்டங்களில் குறிப்பிட்டுள்ள கட்டாய பயிற்சியிலிருந்து விலக்கு பெறலாம். எனவே, அரசு திட்டங்கள் பற்றிய விளக்கங்களும் அதன் மூலம் பயன்பெறும் வழிவகைகளும் ஏற்படுத்தி தரப்படும் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம் என தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

மேலே குறிப்பிட்டுள்ள தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கு ஆர்வமுள்ள நபர்களுக்கு பயன் பெற வழிவகை ஏற்படுத்தி தரப்படும் எனவும் மேலும் விவரங்களக்கு தொலைபேசி மற்றும் கைபேசி எண்கள் எண்: (96771 52265, 8668102600, 044-22252081, 22252082) ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம் எனவும் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண்க:

போக்குவரத்துக் கழகத்தை தனியார் மயமாக்கும் பேச்சுக்கே இடமில்லை- முதல்வர் திட்டவட்டம்

கொப்பரை கொள்முதல் ஏப்ரல் மாதம் தொடங்கப்படும்- கோவை மாவட்ட ஆட்சியர் தகவல்

English Summary: Awareness camp for entrepreneurs in Chennai held on march 14 Published on: 11 March 2023, 11:05 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.