1. வாழ்வும் நலமும்

கோடையில் அதிகத் தண்ணீர் பருகுங்கள்- சுகாதாரத்துறை யோசனை!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Drink more water in summer - health idea!

தமிழகத்தின் பல மாவட்டங்களில் கோடை வெயில் சதம் அடித்திருப்பதால், வெயிலை சமாளிக்க மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகளில் மக்கள் கவனம் கொள்ளுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
சென்னை, வேலூர், மதுரை, கரூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருச்சி, திருப்பத்தூர் போன்ற மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகி வருகிறது.

எனவே கோடை வெயிலை சமாளிக்க ஏதுவாக, பழம் மற்றும் காய்கறிகளை அதிகளவில் உணவில் சேர்த்துக்கொள்ளுமாறு, மாநில சுகாதாரத்துறை யோசனை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

உங்களுக்கு தாகம் இல்லாவிட்டாலும், முடிந்தவரை போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும். தாகம் நீரிழப்பின் ஒரு நல்ல குறியீடு அல்ல.பயணத்தின் போது குடிநீரை எடுத்துச் செல்லுங்கள்.

  • ஓ.ஆர்.எஸ். மற்றும் எலுமிச்சை தண்ணீர், இளநீர், மோர், பழச்சாறுகள் போன்ற வீட்டில் தயாரிக்கப்பட்ட பானங்களை சிறிது உப்பு சேர்த்து உட்கொள்ளவும்.

  • முலாம்பழம், கஸ்தூரி முலாம்பழம், ஆரஞ்சு, திராட்சை, அன்னாசி, வெள்ளரி அல்லது உள்நாட்டில் கிடைக்கும் பிற பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற அதிக நீர்ச்சத்து கொண்ட பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்ணுங்கள்.

  • உடலை முழுமையாக மறைக்கும் உடைகளை அணியவும்

    வெளிர் நிறங்களில் மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணிவது நல்லது.

  • உங்கள் தலையை மூடிக்கொள்ளுங்கள். சூரிய ஒளியில் நேரடியாக வெளிப்படும் போது குடை, தொப்பி, துண்டு மற்றும் பிற பாரம்பரிய தலையை மூடும் பொருட்களை பயன்படுத்தவும்.

  • வெயிலில் வெளியே செல்லும் போது காலணிகள் அணிந்து கொள்வது மிக மிக அவசியம்.

  • நல்ல காற்றோட்டம் மற்றும் குளிர்ந்த இடங்களில் இருக்கவும்.

  • வெளியில் செல்வதாக இருந்தால், உங்கள் வெளிப்புறச் செயல்பாடுகளை நாளின் குளிர்ச்சியான நேரங்களுக்குள் மேற்கொள்ளவும், அதாவது காலை மற்றும் மாலை வேளைகளைத் தேர்வு செய்து கொள்ளலாம்.

  • குறிப்பாக மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலான வேளைகளில்  வெளியில் செல்வதை தவிர்க்கவும் 

  • மதியம் வெளியில் செல்லும்போது கடினமான செயல்களைத் தவிர்க்கவும்.

    வெறுங்காலுடன் வெளியே செல்லாதீர்கள்.

  • நண்பகலில் சமைப்பதைத் தவிர்க்கவும். சமையல் செய்யும் இடத்தை போதுமான அளவு காற்றோட்டம் செய்ய கதவுகள் மற்றும் ஜன்னல்களைத் திறக்கவும்.

  • ஆல்கஹால், தேநீர், காபி மற்றும் புட்டிகளில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் அல்லது அதிக அளவு சர்க்கரை கொண்ட பானங்கள் ஆகியவற்றைத் தவிர்க்கவும். இவை உண்கையில் அதிக உடல் திரவத்தை இழக்க வழிவகுக்கும் அல்லது வயிற்றுப்பிடிப்பை ஏற்படுத்தலாம்.

  • புரதச்சத்து அதிகம் உள்ள உணவைத் தவிர்க்கவும், பழைய உணவுகளை உண்ண வேண்டாம்.

நிறுத்தப்பட்டுள்ள வாகனத்தில் குழந்தைகளையோ செல்லப்பிராணிகளையோ விடாதீர்கள். ஒரு வாகனத்தின் உள்ளே வெப்பநிலை ஆபத்தானதாக இருக்கலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

நீட் தேர்வு- விண்ணப்பிக்கும் காலக்கெடு மே 15ம் தேதி வரை நீட்டிப்பு!

தரித்திரம் தொற்றிக்கொள்ளும் செடிகள்- இவற்றை வளர்க்க வேண்டாம்!

English Summary: Drink more water in summer - health idea! Published on: 04 May 2022, 09:18 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.