1. வாழ்வும் நலமும்

நீங்கள் பயன்படுத்தும் சமையல் எண்ணெய் கலப்படமானதா என்பதை கண்டறியும் ட்ரிக்!

Aruljothe Alagar
Aruljothe Alagar
The trick to finding out if the cooking oil you use is adulterated!

சமையல் எண்ணெய்கள் என்பது சமையலறையில் மிகவும் முக்கியமான பொருளாகும். இந்த த எண்ணெய்களில் கலப்படம் செய்யப்படுவது பல ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்தும் மற்றும் நம் உயிருக்கு அச்சுறுத்தும் ஆபத்தான & நச்சு கூறுகளை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. இது போன்ற பிரச்சினையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் FSSAI (#DetectFoodAdulterents) கலப்படமான எண்ணையை கண்டறிதல் என்ற முயற்சியைத் தொடங்கியுள்ளது.

முக்கிய சுகாதார அபாயங்கள்:

குறிப்பாக குழந்தைகள் மத்தியில் இத்தகைய கலப்பட எண்ணெயை உட்கொள்வது பெரிய சுகாதார பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. இதை தவிர்க்க, நாம் எப்போதும் சமையல் எண்ணெயில் சேர்க்கப்பட்ட பொருட்களை சரிபார்த்து, ஷாப்பிங் செய்யும்போது பார்த்து கவனமாக தேர்வு செய்ய வேண்டும்.

ட்ரை-ஆர்த்தோ-கிரேசில்-பாஸ்பேட் (TOCP) என்பது ஒரு ஆர்கனோ-பாஸ்பரஸ் பொருளாகும், இது முன்னர் பல நச்சு நிகழ்வுகளுக்கு காரணமாக இருந்தது.

தேசிய மருத்துவ நூலகத்தின் படி, TOCP இன் நுகர்வு 10 முதல் 20 நாட்களில் அறிகுறிகளைக் காட்டுகிறது. ஆரம்ப கட்டத்தில், இது கீழ் முனைகளில் வலி மற்றும் பரேஸ்டீசியாவை அதாவது நரம்புகள் மீது அழுத்தம், கூச்ச உணர்வு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

வீட்டில் சமையல் எண்ணெயில் கலப்படத்தை சரிபார்க்கும் முறை:

இந்த ட்விட்டர் பக்கத்தில், (#DetectingFoodAdulterants) உணவு கலப்படமானதாகி கண்டறியும்ஒரு எளிய தந்திரத்தை  ஒவ்வொரு வாரமும் பகிர்ந்து கொள்கிறார்கள், உங்கள் உணவு கலப்படமா இல்லையா என்பதைச் சரிபார்க்க நீங்கள் இதனை முயற்சி செய்யலாம். வீட்டிலுள்ள சமையல் எண்ணெயில் நச்சுத்தன்மையுள்ள திரி-ஆர்த்தோ-கிரெசில்-பாஸ்பேட் கலப்படத்தை சரிபார்க்க சில படிகள் கீழே உள்ளன:

ஒரு கொள்கலனில் 2 மிலி எண்ணெயை எடுத்து, பின்னர் அதில் சிறிது மஞ்சள் வெண்ணெய் சேர்க்கவும்.

எண்ணெயின் நிறம் மாறவில்லை என்றால், அது கலப்படமற்றது மற்றும் தூய்மையானது மற்றும் நாம் சாப்பிடுவதற்கு ஏற்றது என்று அர்த்தம்.

நிறம் சிவப்பு நிறமாக மாறினால், எண்ணெய் கலப்படமானது மற்றும் நுகர்வுக்கு தீங்கு விளைவிக்கும் என்று கண்டறிந்து கொள்ளலாம்.

FSSAI பற்றி:

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் என்பது இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி அமைப்பாகும். FSSAI 2006 இல் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை சட்டத்தின் (FSSAI) கீழ் அமைக்கப்பட்டது.

FSSAI இன் முக்கிய செயல்பாடு உணவு பாதுகாப்பு தரங்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் மேற்பார்வை செய்து பொது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதும் பாதுகாப்பதும் ஆகும்.

மேலும் படிக்க...

எண்ணெய் மில் வணிகம்: லாபகரமான எண்ணெய் வணிகத்திற்க்கான வழிகள்!

English Summary: The trick to finding out if the cooking oil you use is adulterated! Published on: 07 October 2021, 10:56 IST

Like this article?

Hey! I am Aruljothe Alagar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.