1. தோட்டக்கலை

கீரை சாகுபடிக்கு ரூ.2500 மானியம்- தோட்டக்கலைத்துறை அறிவிப்பு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Rs 2,500 subsidy for lettuce varieties - Horticulture Department announces!

தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இயற்கை வேளாண் சாகுபடியில் காய்கறிகள் மற்றும் கொடி வகைகளுக்கு விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்  என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விழுப்புரம் தோட்டக்கலை துறை துணை இயக்குநர் இந்திரா வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :

  • விழுப்புரம் மாவட்டத்திற்கு தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் 2020-21ம் ஆண்டு திட்டத்தின் கீழ் தக்காளி, கத்தரி, வெண்டை மற்றும் அவரை, பாகல் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் 1 எக்டருக்கு ரூ.3750 மானியம் வழங்கப்படும்.

  • இதேபோல் கீரை வகைகளுக்கு ரூ.2500 ஊக்கதொகை வழங்கப்படுகிறது.

  • இத்திட்டத்தில் விவசாயி அதிகபட்சமாக 2 எக்டர் வரை பயன் பெறலாம்.

Credit : Adupangarai
  • மேலும், இயற்கை முறையில் தோட்டக்கலை பயிர் வகைகளை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அங்கக சான்று பதிவு செய்ய கட்டணமாக ரூ.500 வழங்கப்பட்டு அங்கக சான்றளிப்பு துறையுடன் இணைந்து சான்றிதழ் பெற வழிவகை செய்யப்பட்டு வருகிறது.

  • இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களில் நிலத்திற்கான கணினி சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கிக்கணக்கு புத்தக நகல் (Nationalized Bank) மற்றும் 2 போட்டோ ஆகியவற்றுடன் அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • மேலும் படிக்க...

வேம்பு நடவு செய்ய ஹெக்டேருக்கு ரூ.18,000மானியம்- விவசாயிகளுக்கு வாய்ப்பு!

காரைக்குடியில் காடை மற்றும் காளான் வளர்ப்பு இலவச பயிற்சி!

 

English Summary: Rs 2,500 subsidy for lettuce varieties - Horticulture Department announces! Published on: 27 September 2020, 07:43 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.