1. செய்திகள்

மொய் விருந்து விழாவில் ஒரே நாளில் ரூ.15 கோடி வசூல்

T. Vigneshwaran
T. Vigneshwaran
15 Crores collected

மாவட்டம் நெடுவாசல் கிழக்கு கிராமத்தில் 31 பேர் இணைந்து நடத்திய மொய்விருந்து விழாவில் ஒரே நாளில் 15 கோடி ரூபாய் மொய் வசூலாகி இருப்பதாக தற்போது தெரியவந்துள்ளது. இதனால் அந்த விழாதாரர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

புதுக்கோட்டை தஞ்சை மாவட்ட எல்லை கிராமங்களில் ஆனி மாதம் தொடங்கி ஆவணி மாதம் வரையில் மொய்விருந்து விழாக்கள் நடைபெறுவது காலம் காலமாக நடைபெற்று வருகிறது.

கொரோனா ஏற்படுத்திய பாதிப்புகளின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மொய் விருந்து விழாக்கள் கலை இழந்து காணப்பட்ட நிலையில் இந்த ஆண்டு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஆனி மாதம் இறுதி முதல் புதுக்கோட்டை தஞ்சை மாவட்ட எல்லை கிராமங்களில் மொய்விருந்து விழாக்கள் களைக்கட்ட தொடங்கியது.

தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டிற்கான மொய் விருந்து விழாக்கள் நிறைவடையும் நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன் நெடுவாசல் கிழக்கு கிராமத்தில் 31 பேர் இணைந்து ஒரே பொது இடத்தில் மொய் விருந்து விழா வைத்துள்ளனர்.

இந்த விழாவில் 31 பேருக்கும் சேர்த்து ஒரே நாளில் சுமார் 15 கோடி ரூபாய் வரையில் மொய் வசூல் நடைபெற்றுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது. இதில் அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கு மட்டும் ரூ.2.50 கோடி மொய் வசூல் ஆகியுள்ளது.

மேலும் படிக்க:

3 லட்சம் வரை விவசாயிகளுக்கு வட்டியில்லாமல் கடன் வழங்கு மத்திய அரசு

Subsidy: விவசாயிகள் ஏக்கருக்கு 9000 ரூபாய் மானியமாகப் பெற முடியும்

English Summary: 15 Crores collected in a single day by Moi Bhanda Published on: 19 August 2022, 01:45 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.