1. செய்திகள்

PM kisan 13 வது தவணை- பதிவு செய்த விவசாயிகளுக்கு கிடைக்காமல் போக காரணம் இதுதானா?

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
3.30 crore registered farmers are not getting the benefit of the PM kisan scheme

PM Kisan Samman Nidhi Yojana திட்டத்தில் 14 வது தவணையை அரசாங்கம் விரைவில் வழங்க இருக்கும் நிலையில் தகுதியான விவசாயிகள் தனது விவரத்தை புதுப்பித்தல் மற்றும் திருத்தம் தொடர்பான பணிகளை மேற்கொள்ளுமாறு ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 3.30 கோடி விவசாயிகளுக்கு 13 வது தவணை கிடைக்காமல் போனதற்கான தகவலையும் ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு உதவும் வகையில் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி உதவித் திட்டம் (பி.எம் கிசான் சம்மான் நிதி) 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்படி, 4 மாதங்களுக்கு ஒருமுறை தலா 2 ஆயிரம் ரூபாய் என ஆண்டிற்கு 6 ஆயிரம் விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது. இந்த தொகையானது விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்தியா முழுவதும் 10.09 கோடி விவசாயிகள் இந்த திட்டத்தினால் பயன் பெற்று வருகின்றனர். விவசாயிகளுக்கு பிஎம் கிசான் நிதியுதவி திட்டம் ஒரு வரப்பிரசாதமாகவே கருதப்படுகிறது.

இதனிடையே PM கிசானின் 13-வது தவணை பிப்ரவரி 27, 2023 அன்று வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 14-வது தவணை மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் வழங்கப்படலாம். ஆனால், அரசு இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.

ஆனால் 14 வது தவணையை பெற தகுதியான விவசாயிகள் தனது விவரத்தை புதுப்பித்தல் மற்றும் திருத்தம் தொடர்பான பணிகளை மேற்கொள்ளுமாறு ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சரியான நேரத்தில் உங்களது விவரங்கள் சரிபார்க்கப்பட்டு பணத்தை தங்கள் கணக்கில் டெபாசிட் செய்ய முடியும் எனத் தெரிவித்துள்ளது.

13 வது தவணை நிராகரிப்பட்ட காரணம்:

PM Kisan Yojana அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 12 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் 13-வது தவணை நிதியுதவினை பெற பதிவு செய்துள்ளனர். ஆனால் 8.69 கோடி விவசாயிகள் மட்டுமே 13-வது தவணையின் கீழ் தலா ரூ.2,000 பெற்றுள்ளனர். மீதமுள்ள 3.30 கோடி பதிவு செய்த விவசாயிகள் பல காரணங்களால் நிதியுதவி பெற முடியவில்லை. இவர்களில் சிலர் பயனாளிகள் அல்லாதவர்கள், மற்றவர்கள் சரிபார்ப்பு முடிக்கப்படாததால், புதிய தவணைகளின் பலனைப் பெற இயலவில்லை.

PM Kisan Yojana மூலம் பயனடையும் விவசாயிகளை அடையாளம் காண, சரிபார்ப்பு செயல்முறை அல்லது e-KYC அவசியமானது. e-KYC, ஆதார் விவரங்கள், நில விதைப்பு மற்றும் பிற விவரங்களை புதுப்பித்த விவசாயிகள் மட்டுமே அடுத்த தவணைக்கு தகுதி பெறுவார்கள். அதுமட்டுமின்றி, பயனாளி தனது பெயர், ஆதார் அட்டை, வங்கி விவரங்கள் மற்றும் இதர ஆவணங்களில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதனை திருத்தியிருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்க.

மேலும் காண்க:

PM கிசான் திட்டத்தில் 42 கோடி முறைகேடு- இறந்த விவசாயி வங்கிக்கணக்கிலும் பணவரவு

English Summary: 3.30 crore registered farmers are not getting the benefit of the PM kisan scheme Published on: 08 April 2023, 02:32 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.