1. செய்திகள்

6ம் வகுப்பு பள்ளி மாணவன் இடி தாக்கி உயிரிழப்பு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
6th standard school student killed by lightning!
திருப்பத்தூர் அருகே 6ம் வகுப்பு படிக்கும் மாணவன் இடி தாக்கி உயிரிழந்த சம்பவம் பெற்றோரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. மழைக்காலம் வரப்போகிறது என்பது மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், மழை தொடர்பான விபத்துக்களில் சிக்கி பலியாவது தொடர்கதையாகி வருகிறது. இத்தகைய விபத்துகள் தடுக்கப்பட வேண்டிய, தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.

6ம் வகுப்பு

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாது மலை நெல்லிவாசல் நாடு பகுதியை சேர்ந்தவர் வேடி, இவரது மகன் சிவா.11 வயதான இந்த சிறுவனின் பெற்றோர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டனர். இதனால் மேல்பட்டு கிராமத்தில் உள்ள தனது தாய் மாமா வெங்கடாசலம் அரவணைப்பில் இருந்து வந்தார். மேலும் சிறுவன் சிவா அப்பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தான்.

இடி மின்னல் தாக்கி

இந்நிலையில் நேற்று இரவு சிவா வீட்டின் ஒர் அறையில் துாங்கிக் கொண்டிருந்தான். அப்பகுதியில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது சிவா துாங்கிக் கொண்டிருந்த அறையின் மேற் கூரை மீது பயங்கர சத்தத்துடன் இடி தாக்கியதில் சிவா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

இது குறித்து வெங்கடாசலம் கொடுத்தவர் புகாரின் பேரில், திருப்பத்துார் கிராமிய போலீசார் அங்கு சென்று இடித்தாகி இறந்த சிவாவின் உடலை மீட்டு திருப்பத்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இடி தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க...

4 வயது குழந்தைகள் வேலைக்குத் தேவை - வித்தியாசமான விளம்பரம்!

பிள்ளையாருக்கு ரூ.316 கோடிக்கு காப்பீடு!

English Summary: 6th standard school student killed by lightning! Published on: 07 September 2022, 10:11 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.