திருப்பத்தூர் அருகே 6ம் வகுப்பு படிக்கும் மாணவன் இடி தாக்கி உயிரிழந்த சம்பவம் பெற்றோரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
மழைக்காலம் வரப்போகிறது என்பது மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், மழை தொடர்பான விபத்துக்களில் சிக்கி பலியாவது தொடர்கதையாகி வருகிறது. இத்தகைய விபத்துகள் தடுக்கப்பட வேண்டிய, தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.
6ம் வகுப்பு
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாது மலை நெல்லிவாசல் நாடு பகுதியை சேர்ந்தவர் வேடி, இவரது மகன் சிவா.11 வயதான இந்த சிறுவனின் பெற்றோர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டனர். இதனால் மேல்பட்டு கிராமத்தில் உள்ள தனது தாய் மாமா வெங்கடாசலம் அரவணைப்பில் இருந்து வந்தார். மேலும் சிறுவன் சிவா அப்பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தான்.
இடி மின்னல் தாக்கி
இந்நிலையில் நேற்று இரவு சிவா வீட்டின் ஒர் அறையில் துாங்கிக் கொண்டிருந்தான். அப்பகுதியில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது சிவா துாங்கிக் கொண்டிருந்த அறையின் மேற் கூரை மீது பயங்கர சத்தத்துடன் இடி தாக்கியதில் சிவா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
இது குறித்து வெங்கடாசலம் கொடுத்தவர் புகாரின் பேரில், திருப்பத்துார் கிராமிய போலீசார் அங்கு சென்று இடித்தாகி இறந்த சிவாவின் உடலை மீட்டு திருப்பத்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இடி தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary: 6th standard school student killed by lightning!Published on: 07 September 2022, 10:11 IST
எங்களுக்கு ஆதரவளியுங்கள்!
அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.
உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....
Share your comments