1. செய்திகள்

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் சற்று முன்பு வெளியானது: நாடு முழுவதிலுமிருந்து 13 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வு எழுதி இருந்தனர்:91.1% தேர்ச்சி விகிதம்

KJ Staff
KJ Staff

சிபிஎஸ் இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் சற்று முன்பு வெளியானது. இம்முறை சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை மே மாதத்தில் வெளியிடுவததாக அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதே போல் மே  2 ஆம் தேதி பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டது. பன்னிரண்டாம் வகுப்பு முடிவுகளை வெளியிட்டது போல் முன்னறிவிப்பு ஏதுமின்றி வெளியீட்டு மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சியினை கொடுக்கும் என எதிர்பார்க்க பட்டது. அதே போல் முன்னறிவிப்பு ஏதுமின்றி தேர்வு முடிவுகளை சற்று முன்பு வெளியிட்டது.

பத்தாம் வகுப்பு தேர்வு கடந்த மாதம் பிப்ரவரி  21 , ஆம் தேதி தொடங்கி மார்ச் 29 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தியா முழுவதிலுமிருந்து மொத்தம் 31 14 831 மாணவர்கள் தேர்வு எழுதி உள்ளனர். இதில் 18 19 077  மாணவர்கள், 12 95 754 மாணவிகள்மற்றும் 28 மூன்றாம்பாலிதினர் தேர்வு எழுதி உள்ளனர். விடைத்தாள் சரிபார்க்கும் பணி கடந்த  மாதம் ஏப்ரல் 20 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

 கடந்த ஆண்டு  27 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதி இருந்தனர் . தேர்ச்சி விகிதமானது  86.70% சதவீதமாக இருந்தது. மாணவர்களுக்கு அவர்களது கைபேசி எண்ணிற்கு குறுச்செய்தியாக அனுப்பிவைக்கப்படும்.

  தேர்வுமுடிவுகளைஎவ்வாறுதெரிந்துகொள்வது ?

மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை பின்வரும் இணையதளங்களின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

English Summary: CBSE 10 Results Are Declared: Check Out The Official Websites: 91.1% students Are Passed Published on: 06 May 2019, 03:23 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.