1. செய்திகள்

2022 ஆகஸ்ட் மாதத்தில் சந்திராயன்-3 விண்ணில் ஏவப்படும்: மத்திய அரசு தகவல்!

R. Balakrishnan
R. Balakrishnan
Chandrayan-3

வரும் ஆகஸ்ட் மாதத்தில் சந்திரயான்- 3 ஐ விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்த மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் சந்திராயன் 3 பற்றிய தகவல்களை அளித்தார்.

சந்திராயன்-3 (Chandrayan-3)

2022 ஆகஸ்ட்டில் சந்திரயான்-3 ஐ விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சந்திரயான் 2-லிருந்து கற்றுக்கொண்டது மற்றும் தேசிய அளவிலான நிபுணர்களின் ஆலோசனைகள் அடிப்படையில் சந்திரயான் 3-ஐ வெற்றிகரமாக செயல்படுத்தும் நடவடிக்கைகள் வேகமாக நடைபெறுகின்றன.

இது தொடர்பான வன்பொருள்கள் அவற்றின் சோதனைகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு, 2022 ஆகஸ்ட்டில் செலுத்த திட்டமிடப்பட்ட்டுள்ளது.

கோவிட்-19 (Covid-19)

2022 ஜனவரி முதல் டிசம்பர் வரை 19 முறை 8 கலன்கள் விண்ணில் செலுத்தும் திட்டமும் உள்ளன. இதில் 07 விண்கலத் திட்டங்கள், 04 தொழில்நுட்ப செய்முறை திட்டங்கள் ஆகியவையும் அடங்கும். நடைமுறையில் உள்ள பல திட்டங்கள் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக பாதிக்கப்பட்டன.

விண்வெளித்துறை சீர்திருத்தங்கள், புதிதாக அறிமுகம் செயபப்பட்ட தேவையால் இயக்கப்படும் மாதிரிகள் பின்னணியில் திட்டங்களுக்கு மறுமுன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் படிக்க

ஆய்வில் அதிர்ச்சி தகவல்: ஒமைக்ரானை விட வேகமாக பரவும் பி.ஏ., - 2 வைரஸ்!

ஒரே நாடு ஒரே பத்திரப்பதிவு முறை சாத்தியமாக என்ன செய்ய வேண்டும்!

English Summary: Chandrayan-3 to be launched in August 2022: Central Government Information! Published on: 03 February 2022, 10:44 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.