1. செய்திகள்

ஜல்லிக்கட்டில் நாட்டு மாடுகள்: ஐகோர்ட் தீர்ப்புக்கு தடை விதித்தது சுப்ரீம் கோர்ட்!

R. Balakrishnan
R. Balakrishnan

Jallikattu

தைத்திருநாள் மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது வழக்கம். இதில், நாட்டு மாடுகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், அத்தீர்ப்புக்கு தடை விதித்துள்ளது உச்சநீதிமன்றம்.

நாட்டு மாடுகள் (Cows)

ஜல்லிக்கட்டில் நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர், கடந்த ஆண்டு செப்டம்பரில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'ஜல்லிக்கட்டு விளையாட்டில் நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க உத்தரவிட வேண்டும்' என கோரியிருந்தார்.

ஜல்லிக்கட்டு (Jallikattu)

மனுவை விசாரித்த நீதிபதிகள், 'ஜல்லிக்கட்டில் கலப்பின மாடுகள் மற்றும் வெளிநாட்டு மாடுகளை அனுமதிக்கக் கூடாது; கால்நடை டாக்டர்கள் சான்றளித்த நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும்' என உத்தரவிட்டனர். உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள், ஜல்லிக்கட்டில் நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து விசாரணையை ஒத்தி வைத்தனர்.

மேலும் படிக்க

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர்வு: மகிழ்ச்சியில் விவசாயிகள்!

10 மாதக் குழந்தைக்கு ரயில்வே வேலை: வரலாற்றில் இதுவே முதன்முறை!

English Summary: Domestic cows in Jallikattu: The Supreme Court has banned the highcourt decision!

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.