1. செய்திகள்

ஈரோடு மஞ்சளுக்கு இந்திய அரசின் புவிசார் குறியீடு

KJ Staff
KJ Staff
erode turmeric GI tag

ஈரோடு  மஞ்சளுக்கு புவிசார்  குறியீடு  கிடைத்துள்ளதால்  அதன்  தனித்தன்மை பாதுகாக்கப்பட்டுள்ளதாக  விவசாயிகள்  மகிழ்ச்சி  அடைந்துள்ளனர்.

இந்திய  அரசு  கடந்த  1999-ம்  ஆண்டு  பல  வகையான  பொருட்களுக்கு  புவிசார் குறியீடு  பதிவு  மற்றும்  பாதுகாப்பு  சட்டம்  கொண்டு  வந்தது.  இதன்  மூலம், புவிசார்  வழங்கப்பட்ட  பொருட்களை  மற்ற  பகுதியினர்  விற்பனை செய்வதும், போலிகளும்  தடுக்கப்படுகிறது. மஞ்சள்  வகைகளில்  இந்தியாவில், மகாராஷ்ட்ரா மாநில  வைகான்  மஞ்சள்,  ஒடிசா  கந்தமால்  மலை  மஞ்சள்  ஆகியவை  புவிசார் பெற்றுள்ளது.  இந்த  வரிசையில்  ஈரோடு  மஞ்சளும்  இடம்  பெற  வேண்டும்  என தொடர்ந்து  முயற்சி  எடுக்கப்பட்டு  வந்தது.  தேசிய   அளவிளான  மஞ்சள் சந்தையில் ,  ஈரோடு  மஞ்சளுக்கு  அதிக  வரவேற்பு  உள்ளது.  இங்கு  சாகுபடி  செய்யும்  மஞ்சளில்  குர்குமின் என்ற  வேதி  பொருளின்  அளவு  அதிகம்  உள்ளது.  இதனால், மஞ்சளின்  நிறம், சுவை , மணம்  வேறுபட்டதாக  இருக்கும்.  மேலும் , பல்வேறு  மருத்துவ  குணம்  உள்ள தால்,  இயற்கை  மருத்துவம், சித்தா மருத்துவத்தில்  பலவித   நோயிகளுக்கு   மருந்துகள்  தயாரிக்கப்படுகிறது.

GI tag termeric

இவ்வாறு  சிறப்பு  வாய்ந்த  ஈரோடு  மஞ்சளுக்கு  புவிசார்  குறியீடு  வழங்க வேண்டும்  என  கடந்த 2011-ம்  ஆண்டு   ஈரோடு  அஞ்சல்  வணிகர்கள்  மற்றும் கிடங்கு  உரிமையாளர்கள்  சங்கம்  சார்பில்,  ஈரோடு  மண்ணின்  தன்மை, மஞ்சளின்  தன்மை,  மஞ்சள்  விளையும்  பகுதிகளின்  எல்லை  குறித்த ஆவணங்களுடன், சென்னையில்  உள்ள  இந்திய  புவிசார்  குறியீடு  பதிவகத்தில் விண்ணப்பிக்கப்பட்டது. 

இதைத் தொடர்ந்து  பலகட்ட  ஆயிவுகள்  மேற்கொள்ளப்பட்டன.  கடந்த 4 மாதங்களுக்கு  முன்னர்,  ஆட்சேபனை  தெரிவிப்பது  தொடர்பாக,  புவிசார் பதிவகத்தின்  ஆன்லைன்  இதழில்  அறிவிக்கை   வெளியிடப்பட்டது.  இதற்கு ஆட்சேபனை  இல்லாததால்,  ஈரோடு  மஞ்சளுக்கு  புவிசார்  குறியீடு வழங்கப்பட்டது.  இதனால்  மஞ்சள்  விவசாயிகள்,  வணிகர்கள்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  இதன்மூலம்  மஞ்சள்  விலை  உயர்வதுடன்  ஏற்றுமதியும் அதிகரிக்க  வாய்ப்பு  ஏற்பட்டுள்ளது.

erode turmeric

இது  குறித்து  இந்திய புவிசார் குறியீடு  பதிவகத்தில்  இணைப் பதிவாளர் சின்னராஜா  நாயுடு  கூறியதாவது:  ஈரோடு மண்ணின்  தன்மையை  கொண்டு மஞ்சளுக்கு  புவிசார்  குறியீடு  வழங்கப்பட்டுள்ளது.   ஈரோடு மாவட்டம்,  திருப்பூர் மற்றும்  கோவை   ஆகிய  மாவட்டங்களில்  காங்கேயம்,  அன்னூர், தொண்டாமுத்தூர்  போன்ற  பகுதிகளில்  விளையும்  மஞ்சளுக்கு  ஈரோடு  மஞ்சள் என்ற  பெயர்  பொருந்தும்.  ஈரோடு  விதை மஞ்சணை   பிற  பகுதியினர்  வாங்கிச் சென்று  விதைத்தாலும்  அதை  ஈரோடு  மஞ்சளாக  கருத  முடியாது.

ஏனெனில்  மண்ணின்  அடிப்படையைக்  கொண்டு  தான்  புவிசார்  குறியீடு வழங்கப்பட்டுள்ளது.  ஈரோடு  மாவட்ட  மண்ணில் விளைந்தால்   மட்டுமே ஈரோடு  மஞ்சள்  என்று கருதப்படும்.  ஈரோடு  மஞ்சள்  மருத்துவ  குணம் கொண்டதாகவும்  இருக்கும்  என்பது  நிரூபிக்கப்பட்டதையடுத்து,  ஈரோடு மஞ்சளுக்கு  புவிசார்  குறியீடு  வழங்கி  கவுரவிக்கப்பட்டுள்ளது.  இதன்  மூலம் ஈரோடு  மஞ்சள்  உலக  அளவில்  அறியப்படும்  என்பதோடு,  மற்ற  மஞ்சளுடன் ஒப்பிடும் போது  கூடுதல்  விலையும்  கிடைக்க  வாய்ப்புள்ளது  என்றார்.

 

K.SAKTHIPRIYA

KRISHI JAGRAN 

English Summary: GI tag for erode turmeric: happy and excited farmers expecting on increasing rate of turmeric Published on: 24 June 2019, 01:30 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.