1. செய்திகள்

பசுமை குழு: திருச்சியைப் பசுமை திருச்சியாக மாற்ற முடிவு

Poonguzhali R
Poonguzhali R
Green Panel: Decision to transform Trichy into Green Trichy

திருச்சி மாநகரின் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நோக்கில், மரங்கள் வெட்டுவதைத் தவிர்த்து, மரக்கன்றுகளை முறையாக நடுவதைப் பின்பற்றித் திருச்சியைப் பசுமை திருச்சியாக உருவாக்க, மாவட்ட பசுமைக் குழு முடிவு செய்துள்ளது. இதன் விளைவாகத் திருச்சியின் பசுமைப் பரப்பை 10.45%லிருந்து 33% ஆக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியக் காடுகளின் அறிக்கை 2019 இன் படி, மாவட்டம் 4,509 சதுர மீட்டர் புவியியல் பகுதியைக் கொண்டுள்ளது (GA), 471.36 சதுரமீட்டர் எனும் அளவில் பரப்பளவைக் கொண்டுள்ளது. பசுமைப் பரப்பில் 53.53 சதுர மீட்டர் அளவில் மிக அடர்ந்த காடுகள், 228.35 சதுர மீட்டர் அளவில் மிதமான அடர்ந்த காடுகள் மற்றும் 189.48 சதுர மீட்டர் திறந்தவெளி காடுகள் காணப்படுகின்றன. இவற்றில் தமிழகம் 1,30,060 சதுர மீட்டர் எனும் மொத்தப் பரப்பளவில் 26,364.02 சதுர மீட்டர் அளவில் பசுமைப் பகுதியைக் கொண்டுள்ளது பரப்பளவைக் கொண்டுள்ளது என்றும், 33% இலக்கு வைக்கப்பட்ட பசுமைப் பரப்பில் 20.27% வரை தற்போது உள்ளது என்றும் அறிக்கை கூறிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் கடந்த ஏப்ரல் 2021 உத்தரவின்படி அமைக்கப்பட்ட மாவட்ட பசுமைக் குழு, மே 23 அன்று திருச்சியில் கூட்டத்தைக் கூட்டியது. மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைவராகவும், மாவட்ட வன அலுவலர் (டிஎஃப்ஓ) ஜி கிரண் உறுப்பினர்/செயலாளராகவும் இடம் பெற்றுக் கூட்டத்தை நடத்தினர். மேலும் இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர், எஸ்பி மற்றும் பல்வேறு அரசுத் துறைகளின் பிரதிநிதிகள் உறுப்பினர்களாகக் கலந்து கொண்டு சிறப்புச் செய்தனர்.

பொது நிலம் மற்றும் பொது இடங்களில் நிற்கும் மரங்களை வரைபடமாக்கவும், நிற்கும்/விழும் மரங்களின் விரிவான பட்டியலைத் தயாரித்து, அவ்வப்போது பட்டியலைப் புதுப்பிக்கவும் எனப் பல்வேறு தீர்மானங்களை குழு தீர்மானித்தது. பொது நிலங்கள் மற்றும் பொது இடங்களில் மரங்களை வெட்டுவதற்கு தகுந்த விசாரிப்புகளின் அடிப்படையிலும், சுற்றுப்புற மதிப்பீட்டிற்குப் பிறகே அனுமதி வழங்கப்படும் எனவும் குழுவில் தீர்மானம் செய்யப்பட்டுள்ளது.

மாநில பசுமைக் குழுவின் வழிகாட்டுதலின் கீழ் பங்குதாரர்கள் மற்றும் பல்வேறு துறைகளின் பிரதிநிதிகளுடன் ஒருங்கிணைந்து அனைத்து பொது நிலங்களிலும் வருடாந்திர மரம் நடும் பணியைக் குழு கவனித்துக் கொள்ளும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

2021-2022 ஆம் ஆண்டில், வனத்துறை வேம்பு (azadirachta indica), புளி (tamarindus indica), தேக்கு (tectona grandis), மலை வேம்பு (melia dubia), மஹோகனி (swietenia mahagoni) ஆகிய மரக்கன்றுகளை சுமார் 2.04 லட்சம் எனும் எண்ணிக்கையில் வளர்க்கப்பட்டது. அதோடு, நிலையான பசுமை கவர் கூட்டமைப்பு (TNMSGCF) மீதான தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் வேளாண் துறை மூலம் அவற்றை விநியோகித்தது என்பது குறிப்பிடத்தக்கச் செய்தியாகும்.

மேலும் படிக்க

தமிழகப் பள்ளிகளுக்கு அனைத்து சனிக்கிழமையும் விடுமுறை அறிவிப்பு!

மாதம் ரூ. 30,000 லாபம் தரும் காடை வளர்ப்பு

English Summary: Green Panel: Decision to transform Trichy into Green Trichy Published on: 27 May 2022, 12:50 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.