1. செய்திகள்

அமலுக்கு வந்தது 5 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு அரை டிக்கெட் முறை!

R. Balakrishnan
R. Balakrishnan
Half ticket system for children above 5 years of age came into effect!

அரசு பஸ்களில், 5 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு அரை டிக்கெட் எடுக்கலாம் என்ற நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. அரசு பஸ்களில், 3 வயது வரை இலவச பயணம் அனுமதிக்கப்பட்டு இருந்தது. நகர பஸ்களைத் தவிர, மற்ற பஸ்களில், 3 வயது முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, 'அரை டிக்கெட்' என்ற பாதி கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

அரை டிக்கெட் (Half Ticket)

இந்நிலையில், போக்குவரத்து மானிய கோரிக்கையின் போது, துறை அமைச்சர் சிவசங்கர், இனி, 5 வயது வரை குழந்தைகளுக்கு இலவச பயணம் அனுமதிக்கப்படும் என்றும், 6 முதல் 12 வயது குழந்தைகளுக்கு அரை டிக்கெட் சலுகை வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.

இதையடுத்து, நேற்று முதல், 5 வயது வரை உள்ள குழந்தைகளை, அனைத்து பஸ்களிலும் இலவச பயணத்துக்கு அனுமதிக்கலாம் என நடத்துனர்களுக்கு, போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

இதுகுறித்து, அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் இளங்கோவன் கூறியதாவது: தொலைதுார பஸ்களில், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இலவச பயணம் அனுமதிக்கப்படுகிறது.

அந்த குழந்தைகளை மடியில் வைத்து அழைத்துச் செல்வதில் சிரமம் உள்ளதாக சிலர் கருதுகின்றனர். அவ்வாறு கருதுவோர், குழந்தைகளுக்கு கட்டணம் செலுத்தி இருக்கை பெறலாம். முன்பதிவிலும் இந்த வசதியை பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் படிக்க

புதிய வசதிகளுடன் வாட்ஸ்அப்: புதிய அப்டேட் என்ன?

சிவகங்கை: விவசாயி வீட்டில் 40 சவரன் நகை கொள்ளை

English Summary: Half ticket system for children above 5 years of age came into effect! Published on: 11 May 2022, 06:23 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.
News Hub