1. செய்திகள்

சூறாவளிக் காற்று வீச வாய்ப்பு- மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Hurricane Chance - Fishermen Don't Go To Sea!
Credit : Nation Thailand

அடுத்த 24 மணி நேரத்திற்கு மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசுக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

வானிலை முன்னறிவிப்பு (Weather Forecast)

10.02.2021 முதல் 14.02.21 வரை

  • இன்று முதல் 14ம் தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவக்கூடும்.

  • அடுத்த 24 மணி நேரத்திற்கு காலை நேரங்களில் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இலேசான பனிமூட்டம் காணப்படும்.

சென்னை (Chennai)

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் இருக்கும். காலை நேரங்களில் இலேசான பனிமூட்டம் காணப்படும்.

வெப்பநிலை (Temperature)

அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸையும் ஒட்டியே இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை (Warning for Fishermen)

அடுத்த 24 மணி நேரத்திற்கு மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் வட கிழக்கு திசையில் இருந்து பலத்த சூறாவளிக் காற்று, மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

எனவே இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

நெல் தரிசில் பயறு வகை சாகுபடியை அதிகரிக்கும் சிறந்த வழிகள்!

பயிர்களில் நன்மை செய்யும் பூச்சிகளை உற்பத்தி செய்வது எப்படி?

60 ரூபாயில் மாதம் 5,000 பென்சன் திட்டம்!

English Summary: Hurricane Chance - Fishermen Don't Go To Sea! Published on: 10 February 2021, 12:38 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.