1. செய்திகள்

ஜவஹர்லால் நேரு வேளாண்மை மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரிக்கு பல்கலைக்கழக அந்தஸ்து!

Poonguzhali R
Poonguzhali R

Jawaharlal Nehru College of Agriculture and Research gets university status!

ஜவஹர்லால் நேரு வேளாண்மை மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியானது, STAR அந்தஸ்தைப் பெற்ற முதல் விவசாயக் கல்லூரி என்ற பெருமையைப் பெற்றது, இதன் மூலம் அறிவியல் ஆராய்ச்சிக்காக ரூ.63 லட்சத்தைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இது பல்கலைக்கழகம் எனும் அந்தஸ்தைப் பெற்றுள்ளது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.

காரைக்காலில் உள்ள பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண்மை மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி (PAJANCOA & RI) பல்கலைக்கழகமாகத் தரம் உயர்த்தப்பட உள்ளது. இது வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சிக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதுச்சேரி சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பதிலளித்த வேளாண்மைத் துறை அமைச்சர் ‘தேனி’ சி டிஜெக்குமார், “காரைக்காலில் உள்ள பண்டிட் ஜவஹர்லால் நேரு வேளாண் மற்றும் ஆராய்ச்சிக் கழகம் (பஜான்கோவா & ஆர்ஐ) பல்கலைக்கழகமாக மாற்றப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

அதோடு, வகுப்பறைகள், நூலகம் மற்றும் ஆடிட்டோரியம் கட்டுவதற்கு நபார்டு வங்கி நிதியின் கீழ் 41 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. PAJANCOA & RI தற்போது பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 2022 இல், பயோடெக்னாலஜி துறை PAJANCOA & RI க்கு மதிப்புமிக்க நட்சத்திர அந்தஸ்தை வழங்கியது.

இந்த நிறுவனம் STAR அந்தஸ்தைப் பெற்ற முதல் விவசாயக் கல்லூரி என்ற பெருமையைப் பெற்றது, இதன் மூலம் அறிவியல் ஆராய்ச்சிக்காக ரூ.63 லட்சத்தைப் பெற்றது. கடந்த காலங்களில், கல்லூரி இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளை வழங்கியது. முனைவர் பட்டப் படிப்புகளையும் தொடங்குவதற்கு சமீபத்திய ஆண்டுகளில் முயற்சிகள் எடுக்கப்பட்டன.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், இந்த நிறுவனம் வேளாண் பொருளாதாரம் மற்றும் விரிவாக்கம், வேளாண்மை, தோட்டக்கலை, தாவர இனப்பெருக்கம் மற்றும் மரபியல், மற்றும் மண் அறிவியல் மற்றும் வேளாண் வேதியியல் ஆகிய ஐந்து துறைகளில் டாக்டர் ஆஃப் பிலாசபி (பிஎச்டி) திட்டங்களை வழங்கத் தொடங்கியது.

இது குறித்து PAJANCOA & RI-இன் டீன் Dr A Pouchepparadjou கூறுகையில், "பல்கலைக்கழகமாக மாறுவதன் மூலம், இந்த நிறுவனம் தன்னாட்சி பெற்று, புதிய பாடப்பிரிவுகளைத் தொடங்க முடியும். கிருஷி விக்யான் கேந்திரங்கள், கால்நடை மருத்துவக் கல்லூரி, வனவியல் கல்லூரி மற்றும் மீன்வளக் கல்லூரி போன்ற பல்வேறு நிறுவனங்கள் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படலாம் எனக் கூறியுள்ளார்.

மேலும் இந்த நிறுவனம் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR) மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) ஆகியவற்றின் வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சிக்காக மானியங்களைப் பெறும். இந்த நிறுவனம் அதன் பல்கலைக்கழக அந்தஸ்து மூலம் பல்வேறு அரசு துறைகளிடமிருந்து நிதி பெறும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க

மூன்று மாதங்களில் கூட்டுறவு சங்கங்களில் வேலை வாய்ப்பு!

சந்தன மரங்களுக்குக் காவல்துறையின் ‘ஸ்மார்ட் காவலர்’ செயலி!

English Summary: Jawaharlal Nehru College of Agriculture and Research gets university status!

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.