1. செய்திகள்

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி 9ம் தேதி உருவாக வாய்ப்பு! - சென்னை வானிலை மையம்!

Daisy Rose Mary
Daisy Rose Mary

தமிழகத்தில் அக்.9-ம் தேதி அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசான மழையும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் வரும் அக்.9-ம் தேதி ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் வடக்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு கடல் பகுதியில் உருவாக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

மீனவர்களுக்கு எச்சரிக்க்கை

குமரிக்கடல் பகுதிகளில் 35-45 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவே மீனவர்கள் யாரும் இப்பகுதிக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க...

PM Kisan Update : ரூ.2000 பணம் உங்களுக்கு வந்துவிட்டதா? இல்லையா? உடனடியாக சரிபாருங்கள்!

அதிக மகசூல் அள்ளித்தரும் ஒற்றை நாற்று நெல் நடவு முறை! - விவசாயிகள் ஆர்வம்!

 

English Summary: Low pressure area likely to form over Andaman and Arabian Sea on 9th Published on: 05 October 2020, 04:11 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.