1. செய்திகள்

தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க தயாராகும்மோடி அரசு!

T. Vigneshwaran
T. Vigneshwaran
Modi government ready to provide pensions to labours

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியமாக நிதியுதவி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, 'ஓய்வூதியத்தை நன்கொடை' என்ற பிரசாரத்தை நடத்த, அரசு தயாராகி வருகிறது. இதில், இந்த ஓய்வூதியத்திற்காக மக்கள் தாமாக முன்வந்து பங்களிக்க தூண்டப்படுவார்கள். இந்த பிரச்சாரம் 'கிவ் இட் அப்' பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இருக்கும், இதன் கீழ் தேவைப்படுபவர்களுக்கு சமையல் எரிவாயு மானியத்தை கைவிட மக்கள் தூண்டப்பட்டனர்.

எகனாமிக் டைம்ஸ் அறிக்கையின்படி, 'நன்கொடை ஓய்வூதியம்' பிரச்சாரத்திற்கு ஒரு தொழிலாளிக்கு ரூ.36,000 மட்டுமே செலவாகும். இது பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மன்தன் (PM-SYM) திட்டத்தின் கீழ் ஒரு முறை செலுத்தப்படும், இது தொழிலாளி தனது வாழ்நாள் முழுவதும் செய்த மாதாந்திர பங்களிப்பை ஈடுசெய்யும். இத்திட்டத்தின் கீழ், பயனாளி 60 வயது முதல் ரூ.3,000 மாதாந்திர ஓய்வூதியம் பெற தகுதியுடையவர். அறிக்கையின்படி, உயர்மட்ட பரிசீலனைக்காக தொழிலாளர் அமைச்சகம் இது தொடர்பான முன்மொழிவைத் தயாரித்து வருவதாக உயர் அரசாங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொழிலாளர் அமைச்சக தரவுகளின்படி, அக்டோபரில் 35 தொழிலாளர்கள் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் சேர்ந்துள்ளனர், அதே நேரத்தில் செப்டம்பரில் 85 பேர் பதிவு செய்துள்ளனர். இதுவரை ஆண்டு சராசரி மாதப் பதிவு 2,366 ஆக உள்ளது. இது குறித்து அதிகாரி கூறுகையில், 'அனுமதி கிடைத்தால், திட்டம் புத்துயிர் பெற்று, லட்சக்கணக்கான தொழிலாளர்களை இதன் வரம்பிற்குள் கொண்டு வரும்' என்றார்.

PM-SYM என்பது லட்சக்கணக்கான அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பை வழங்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட தன்னார்வ ஓய்வூதியத் திட்டமாகும். இது 18-40 வயதுக்குட்பட்ட அமைப்புசாராத் துறையில் மாதத்திற்கு 15,000 க்கும் குறைவான ஊதியம் பெறும் தொழிலாளர்களை அடிப்படையாகக் கொண்டது. இதன் கீழ், ஒரு தொழிலாளி ரூ 55 முதல் ரூ 200 வரை பங்களிக்க வேண்டும், அதே சமயம் அதே பங்களிப்பை அரசாங்கமும் வழங்கும்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இத்திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து அக்டோபர் வரை மொத்தம் 45.1 லட்சம் முறைசாரா தொழிலாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும், இது நாட்டில் உள்ள 38 கோடி முறைசாரா தொழிலாளர்களை விட மிகக் குறைவு. அவர்களில் பெரும்பாலோர் 60 வயதிற்குப் பிறகு எந்தவிதமான சமூகப் பாதுகாப்பும் இல்லாமல் இருக்கிறார்கள்.

மேலும் படிக்க:

LIC Plan: ஒரு முறை டெபாசிட், மாதம் ரூ.20,000 ஓய்வூதியம்!

English Summary: Modi government ready to provide pensions to labours! Published on: 29 November 2021, 11:18 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.